சனி, டிசம்பர் 12, 2015

சென்னைப்பெருவெள்ள அழிவு - யார் காரணம்? IISc ஆய்வு



’நீர்நிலைகள், திறந்த வெளிகளை நாசம் செய்ததன் பலனை சென்னை அனுபவிக்கின்றது’ -
Indian Institute of Science, Bengaluru (Centre for Ecological Sciences) - இன்றைய பேரழிவுக்கு பல மாதங்களுக்கு முன்பே எச்சரிக்கப்பட்டது - 
The Hindu 11.12.2015 page 13
1. 1991 தொடங்கி சென்னையின் கான்க்ரீட் கட்டுமானங்கள் 13 மடங்காக உயர்ந்துள்ளது
2. அதே நேரத்தில் வெள்ளம் தாங்கும் பகுதிகள், திறந்த வெளிகளின் அளவு நான்கில் ஒரு பகுதி அபகரிக்கப்படுள்ளது.  திறந்த வெளிகள், சதுப்பு நிலங்கள், வெள்ளம் தாங்கும் பகுதிகள் 18.14% ஆக சுருக்கப்பட்டுள்ளன
3. சென்னையின் கட்டுமானப்பகுதி 1.46%இல் இருந்து 18.6% ஆக உயர்ந்துள்ளது
4. ஆனால் மரங்கள், வனங்கள் உள்ளிட்ட இயற்கைப்பிரதேசங்கள் 22% அழிக்கப்பட்டுள்ளன
5. செயற்கைக்கோள் படங்கள், முன்னெச்சரிப்பு மாதிரிகள் தெரிவிப்பது: சென்னையின் வடமேற்கு, தென்மேற்கு பகுதிகள் முற்றிலும் திட்டமிடப்படாத வளர்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய பெருவெள்ளத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டவை இப்பகுதிகளே என்பது முக்கியமானது
6. சென்னை, கொல்கத்தா போன்ற பெருநகரங்களில், சதுப்பு நிலங்களும் வெள்ளம் தாங்கும் பகுதிகளும்தான் கரைபுரண்டு ஓடும் ஆறுகளில் இருந்து வெளியேறும் நீரை ஏறுக்கொள்வதில் தணிப்பதில் மிக முக்கிய பங்கை செலுத்துகின்றன; நகரத்தை திட்டமிடும் ‘அறிவாளிகள்’ இதை உணரவில்லை

இதே நாசகர நிலை தொடரும் எனில்:

7. 2026இல் சென்னயின் அடர்வில் கட்டுமானப்பகுதியின் அளவு 36.6% அதிகரிக்கும்
8. திறந்த வெளிகள், சதுப்பு நிலம், வெள்ளம் தாங்கும் பகுதிகளின் அளவு 33.1% ஆக குறையும்
9. ஆஸ்பால்ட், கான்க்ரீட், உலோகப்பொருட்களால் ஆன கட்டுமான பகுதிகள் அடுத்த பத்தாண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரிக்கும்; ஆனால் இப்போதுள்ள திறந்த வெளியின் அளவில் மூன்றில் இரண்டு பகுதிகள் காணாமற்போகும்.
இரண்டு கழகங்களும் சேர்ந்து சென்னை மக்களை பேரழிவில் தள்ளியுள்ளன என்பதே பேருண்மை!
இந்த ஆய்வு தலைவருக்கும் தலைவிக்கும் சமர்ப்பணம்!

கருத்துகள் இல்லை: