சனி, டிசம்பர் 05, 2015

சென்னைப்பெருவெள்ளம் (4) அல்லது ‘ப்ரைவேட் ஈஸ் ஒண்டெர்ஃபுல் யா!’

MIOT 'International' standard - 18 பேர் சாவு - தனியார் மருத்துவமனைகளின் ’பிணமாபிமானம்:

உயிர்போகும் எமர்ஜென்சி நிலையிலும் அட்மிசன் போட ஒரு லட்சம் ரெண்டு லட்சம் கவுண்டரில் கட்டினால்தான் உள்ளே அனுமதிப்பார்கள்;
உள்ளே அட்மிசன் ஆகி விட்டால் டாக்டர்கள் வச்சதே சட்டம்; அந்த டெஸ்ட் இந்த டெஸ்ட், ‘இந்த மருந்துகளை எங்க மெடிகல் ஷாப்பில் வாங்கிட்டு வா’... இப்படி நாம் வாங்கும் ஆயிரக்கணக்கான ரூபாய் மருந்துகளை உண்மையில் நோயாளிக்கு பயன்படுத்துகின்றானா அல்லது அப்படியே மீண்டும் அவன் மெடிகல் ஷாப்புக்கே மறு விற்பனைக்கு போகுமா, அவனுக்கே வெளிச்சம்.
இத்தனை கொள்ளைக்கும் பிறகும் செத்துப்போனால் ‘ரெண்டு லட்சம் கட்டிட்டு பாடியை எடுத்துட்டு போஙக’ என்று சொல்வான்.
அதுவும் அரசு ஊழியர் அட்மிட் ஆனால் செம கொண்டாட்டம்தான் ஆஸ்பத்த்ரி முதலாளிக்கு. ஏனெனில் போடப்படும் பில்லின் தொகையை அரசு கட்டி விடும்; கொடுமை என்னவெனில் குறிப்பிட்ட நோய்க்கு அரசு ஒரு லட்சம்தான் தரும் எனில், தனியாக ரெண்டு லட்சம் ரூபாய்க்கு பில் போடுவான் ஆஸ்பத்திரி முதலாளி, அந்த இரண்டு லட்சத்தை அரசு உழியர் தன் சேமிப்பில் இருந்து அல்லது கடனை வாங்கி கட்டித்தொலைய வேண்டும், இல்லையேல் வெளியே விடமாட்டான்.இது மாத ஊதியம் பெறும் ஊழியரின் கதி என்றால் அன்றாடக்கூலிகளின் நிலை?
’இறுதி’யாக: நேற்று செத்துப்போன 14 பேரையும் டெட் பாடியாக அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து போட்டுவிட்டுப்போன மியாட் முதலாளியையும் அவன் டாக்டர்களையும் தேடிக்கொண்டு இருக்கின்றார்கள் செத்தவர்களின் உறவுகள்.
‘வாவ்..ப்ரைவேட் ஈஸ் ப்ரைவேட்யா’

கருத்துகள் இல்லை: