சனி, டிசம்பர் 05, 2015

சென்னைப்பெருவெள்ளம் (1)


சென்னைக்கு மிக அருகில், 20 அடியில் சுவையான குடிநீர்...

கல்லூரிகளில் பொறியியல் படிக்காத நமது முன்னோர்கள் எல்லா ஊர்களிலும் ஏரிகள் குளங்களை வெட்டி வைத்தார்கள்; படித்த நமது தலைமுறை ஆட்சியாளர்களும் பெரீய எஞ்சினியர் ஐயாக்களும் கலெக்டர்துரைகளும் ஏரி ஸ்கீம் என்று போட்டு ஏரிகளில் வீடு கட்ட அனுமதிக்கின்றார்கள்; என்னே விஞ்ஞானப்பார்வை!
சமீப காலங்களில் தினசரிகளின் சனி ஞாயிறு பதிப்புக்களில் முதல் 6 பக்கங்கள் ராட்சச விளம்பரங்கள் ரியல் எஸ்டேட் பிசினஸ் கம்பெனிகள் கொடுப்பவை! பெரும்பாலான காஸ்ட்லி ஏரியாக்களாக சொல்லப்பட்டவை சென்னையின் விளிம்பான வேளச்சேரி, ஓஎம் ஆர், தாம்பரம், பெருங்களத்தூர் ஏரியாக்கள். பழைய காஸ்ட்லி ஏரியாவான அண்ணாநகர் உண்மையில் வயற்காடுகள்தான். இன்றைய மழை வெள்ளம் நிரூபித்துவிட்டது, இந்த ஏரியாக்கள் எல்லாம் ஏரிகள், குளங்கள், குட்டைகள், கண்மாய்கள் என்று! ரியல் எஸ்டேட் முதலைகள்+ஆட்சியாளார்கள்+அதிகாரவர்க்கம் என்ற கூட்டணி சாமானிய மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகின்றது என்பதை இயற்கை அம்பலப்படுத்துகின்றது!

கருத்துகள் இல்லை: