
’ப்ரைவேட் ஈஸ் ப்ரைவ்வேட்...ஒண்டர்ஃபுல் யா..கீப் இட் அப்’
MIOT இண்டெர்னேஷனல் ஸ்டாண்டர்ட் கார்பொரேட் ஆஸ்பத்திரியில் செத்தவர்கள் 18 பேராம். ஆஸ்பத்திரி முதலாளி ஒண்ணு சொல்றான், அரசு ஹெல்த் செக்ரட்டரி வேற ஒண்ணு சொல்றாரு, இவர் சொல்றது ஒரு வகையில் ஆஸ்பத்திரி முதலாளிக்கு சப்போர்ட் பண்ற மாதிரி இருக்கு; மக்கள் பணத்துல சம்பளம் வாங்குற செக்ரட்டரி ஆஸ்பத்திரி முதலாளிக்கு வேலை செய்றாரு.
அரசாங்க எந்திரமும் ஊழியர்களும் சாலைகளில் தண்ணீரை வெளியேற்றி சாலைகளை ரிப்பேர் செய்த பின் கோயம்பேட்டின் கொள்ளையர்களான ஆம்னி பஸ் முதலாளிகள் வெளியூர்களுக்கு 3000 முதல் 6000 வரை கொள்ளையடிக்கிறாய்ங்களாம். அதே சமயம் இன்று முதல் 4 நாட்களுக்கு 3 மாவட்டங்களில் அரசுப்பேருந்துகளில் பயணம் இலவசம் என அரசு அறிவித்துள்ளது.
ஆந்திரா சென்ற இரண்டு மாணவிகள் கையில் பணம் இல்லை, போகும் வழியில் ஏடிஎம்மில் எடுத்து தருகின்றோம் என்று அழுது புரண்டபின் வழியில் பஸ்ஸை நிறுத்தி ஆயிரக்கணக்கில் கொடுத்ததை இன்றைய the hindu பத்திரிக்கை சொல்கின்றது.
ஆவின் பால் வினியோகத்தை அரசு உறுதிப்படுத்த நடவடிககை; அதே சமயம் அரை லிட்டர் பாலை 200 300 ரூபாய் வரைக்கும் ப்ரைவேட் கொள்ளையர்கள் ‘விற்கின்றார்கள்’.
’ப்ரைவேட் ஈஸ் ப்ரைவ்வேட்...ஒண்டர்ஃபுல் யா..கீப் இட் அப்’
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக