அம்மான்னா சும்மாவா?

ஆனா இது சாதா அம்மாவா?
இட்லியில் ஸ்பெசல் இட்லி
தோசையில் ஸ்பெசல் தோசை
வார்டிலும் ஸ்பெசல் வார்டு
அட! கக்கூசிலும் ஸ்பெசல் கக்கூஸ் இருக்க
அம்மா மட்டும் சும்மாவா?
இது ஸ்பெசல் அம்மா!
மனுநீதி காத்த அம்மா!
சூத்திரர்கள் முதுகேறிப் பயணம் செய்து
ஆரிய அரியாசனம் ஏறிய ஸ்பெசல் அம்மா!
ஸ்வாஹா!
பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரம்!
சூத்திரனின் கல்வியும் அறிவும்
ஸ்பெசல் அம்மாவுக்கு மூத்திரம்!
ஸ்வாஹா!
அரசு ஊழியர்கள்
சாலைப்பணியாளர்கள்
மக்கள் நலப்பணியாளர்கள்...
அடச்சீ! சூத்திரர்கள் என்று சொல்லடா!
சமச்சீர்
சமநீதி
புத்தகம்
நூலகம்...
அட! மநுவின் காதில் விழக்கூடுமோ, தீட்டு!
மனிதருசி கண்ட புலியும்
சூத்திர ருசி கண்ட வாளும் சும்மா கிடப்பதில்லை!
அது சம்புகனின் தலைசீவிய வாள்
ஏகலைவனின் விரல் சீவிய வாள்
நந்தனின் உயிரை நறுவிசாய் பறித்த வாள்!
உரையில் உறங்குவதாக பொய் சொல்லப்பட்ட
மநுவின் வாள் மீண்டும் ஒரு முறை வெળியே வந்தது
படிந்திருந்த குருதியின் கனம் தாஙகாமல்
ஒரு கணம் தடுமாறினாலும்
மீண்டும் ஒரு முறை உயர்ந்து அடங்கியது
காரியம் கச்சிதமாக முடிந்தது
ஸ்வாஹா!
யாரங்கே?
வேதகாலப்பழமையான அண்டாக்களை
மீண்டும் அடுப்பில் ஏற்றுங்கள்
ஈயத்தை காய்ச்சுங்கள்
சூத்திரர்கળின் காதுகளை
அகலத்திறந்து வையுங்கள்
யாரங்கே?
அண்டாக்கળின் கீழே அடுப்பெரிக்க
சூத்திர நூலகத்தின் தூண்களையும்
சூத்திர நுலகத்தின் நூல்களையும்
பெயர்த்தெடுத்துப் போடுங்கள்
ஆரிய நெருப்பு
ஆகாயம் முட்டும் எரியட்டும்!
ஸ்வாஹா!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக