செவ்வாய், நவம்பர் 22, 2011

கலயத்தில் உறங்கும் சாம்பலும் ஒரு ஜோடி காலணிகளும்-4






 ( 9/11ஆல் உண்மையில் பயனடைந்தவர்கள் யார்?  மூவர்தான்.  அல்-காய்தாவும் அமெரிக்க ஆயுத உற்பத்தி முதலாளிகளும் அவர்களது கூட்டாளிகளான குடியரசுக்கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகளும்தான்)

மும்பை தாக்குதலின் உச்சகட்ட துயரமே உலகளாவிய பயங்கரவாதத்தின் தாய்வீடான அமெரிக்காவின் மந்திரி காண்டோலிசா ரைஸ் இந்தியாவுக்கு வந்ததுதான். அப்படியே பாகிஷ்தானுக்கும் போனார். நரிய  காவலுக்கு வச்சா கிடைக்கு ரெண்டு ஆடு வேணும்ணு கேக்குமாம்.


ஆக இஸ்லாமிய நாடுகளின் மீதான படை எடுப்புக்கான எதிர்வினை என்பது அமெரிக்காவுக்கும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் எதிரான இஸ்லாமிய மக்களின் கோபம் என்ற புள்ளியில் தொடங்கி அதன் நீட்சியாக இன்று அமெரிக்காவுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் எதிரான 'இஸ்லாமிய' பயங்கரவாதமாக ஆக்கப்பட்டுள்ளது என்பதுதான் வரலாறு கூறும் உண்மை.  இஸ்லாமிய மக்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதில் வெற்றி பெற்றுள்ள அமெரிக்க சார்பு ஊடகங்கள், "நீ ஏன் அவனை முதலில் அடித்தாய்?" என்ற எளிமையான கேள்வியை அமெரிக்காவிடம் கேட்பதில்லை, ஆனால் சர்வதேச சமுதாயத்துக்கு அந்தக் கடமை உள்ளது.  தான் ஒரு உலக ரவுடி என்ற சுயரூபம் உலக சமுதாயத்தின் முன் அம்பலப்பட்டுப் போனதில் அமெரிக்காவுக்கு வருத்தம் உண்டு; 'உலகளாவிய பயங்கரவாதத்தின் மீது தாக்குதல்' என்ற தனது ஒற்றைத்திட்டத்தின் சதிவலையில் தான் மட்டும் தனித்து நிற்காமல் இந்தியாவையும் இணைப்பதன் மூலம், தனது செயலுக்கு நியாயம் கற்பிக்கலாம்.  இதற்காக தன்னைப் போலவே 'உலகளாவிய பயங்கரவாத'த்தின் மீது தாக்குதல் தொடுக்கக் கூடிய ஒரு கூட்டாளியாக இந்தியாவை மாற்ற அமெரிக்கா பெரும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றது.  இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை இந்த நோக்கில் பார்த்தால் மட்டுமே புரியும்.  'நான் மட்டுமா ரவுடி, அவனும்தான்'.  இதற்கு அமெரிக்கா வைத்துள்ள குறிதான் இந்தியா.   உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, அதாவது மும்பை தாக்குதலை சாக்காக வைத்து, பக்கத்தில் உள்ள பாகிஸ்தான் மீது போர் தொடுக்குமானால், தனது பிரச்சாரத்துக்கு அது ஆதரவாக இருக்கும் என்று அமெரிக்கா கணக்குப் போடுகின்றது.  இதற்காக, இந்தியாவுக்குள் தனது அடிமைகளான ஆர்.எஸ்.எஸ். போன்ற வலதுசாரி இந்துத்துவா அமைப்புக்கள் மூலம் "பாகிஷ்தான் மீது படையெடு!" என்று மக்களிடையே பொதுக்கருத்தை உருவாக்க முனைகின்றது; இந்துத்துவா பயங்கரவாதிகளைக் கொண்டு பத்திரிக்கைகளில் கட்டுரை, ஆசிரியருக்கு கடிதம் எழுதுவது, இன்டெர்நெட்டில் பிரச்சாரம் செய்வது, டி.வி.சானல்களில் வாக்கெடுப்பு நடத்துவது, செல்ஃபோனில் எஸ்.எம்.எஸ். பிரச்சாரம் என பல வகையிலும் பிரச்சாரம் செய்கின்றது.

மார்ச் 2003 தொடங்கி 2006 இறுதி வரை 6,50,000 இராக் மக்களை ஜார்ஜ் புஷ் கொன்று குவித்துள்ளான்.  ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் பொதுசுகாதாரக் கல்வி மையத்தின் கணக்கோ இப்படிக் கூறுகின்றது: "...வருடத்திற்கு 1,43,000 மக்கள் செத்து மடிவார்கள் என மதிப்பிடப் பட்டிருந்தது (மார்ச் 2003க்கு முன்னால்).  ஆனால் இன்றைய கணக்கு உண்மையில் இதை விடவும் அதிகம்".  "பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக நாங்கள் பொய் சொன்னோம்" என அமெரிக்க  கனவான்களே அருள்கூர்ந்து ஒத்துக்கொண்டபின் "அங்கிருந்து வெளியேறு" என்று சொல்ல முடியாத அளவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் நியாயவான்களும் பொதுச்செயலாளரும் இந்தியாவில் இருக்கின்ற அமெரிக்க விசுவாசிகளும் வாயில் என்ன வைத்திருக்கின்றார்கள் என்பதை திறந்துதான் பார்க்க வேண்டும்.  9/11ஆல் உண்மையில் பயனடைந்தவர்கள் யார்?  மூவர்தான்.  அல்-காய்தாவும் அமெரிக்க ஆயுத உற்பத்தி முதலாளிகளும் அவர்களது கூட்டாளிகளான குடியரசுக்கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகள்தான். இந்த இடத்தில்,  ஜூலை மாதம் இந்திய நாடளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற ரிலையன்ஸ் முதலாளி அம்பானியின் பணத்தை காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி என  இரண்டு பேரும் பங்கு போட்டுப் பிடித்துக் கொண்டதும், இந்த இரண்டு தேஷ்பக்த கட்சிகளுக்கும் ஏஜெண்டாக ஆயுத வியாபாரியான சமாஜ்வாடி பொதுச்செயலாளர் அமர்சிங் இருந்ததும் உங்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல.

...தொடரும்

கருத்துகள் இல்லை: