சனி, நவம்பர் 19, 2011

கலயத்தில் உறங்கும் சாம்பலும் ஒரு ஜோடி காலணிகளும்-2





















     

(ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஆட்சியில் இருந்தபோது,  தான் ஆட்சியில் இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் இந்திய அரசு எந்திரத்தை தனது இந்துதுவா ஆசாமிகள் நடத்த வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன், பல்கலைக்கழக மானியக்குழு, இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐ.சி.ஹெச்.ஆர்), இந்திய தொல்லியல் துறை, உயர்கல்விக்கான பாடத்திட்டங்களை வடிவமைக்கின்ற குழுக்கள், நீதிமன்ற நீதிபதிகள், ராணுவத்தின் உயர் அதிகாரிகள் என முக்கிய இடங்களில் இந்துதுவா ஆர்.எஸ்.எஸ். வெறியர்களைக் கொண்டு திட்டமிட்டு நிரப்பியது)


1948 ஜனவரி 20, 31 ஆகியவற்றின் தொடர்ச்சியாக, அடுத்த ஒருங்கிணைக்கப்பட்ட பயங்கரவாத நிகழ்வாக, 1984 இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து சீக்கிய இன மக்களுக்கு எதிரான காங்கிரசார் நடத்திய  கொலைவெறித்தாண்டவத்தை சொல்லலாம்.  இன்று மத்திய ஆட்சியில் மந்திரிகளாக இருக்கின்ற, நுனிநாக்கு ஆங்கிலம் பேசுகின்ற பல கனவான்கள், அன்று டெல்லி வீதிகளில் கத்தியோடும் கட்டாரிகளோடும் பெட்ரோல் கேன்களோடும் பல சீக்கியர்களைக் கொன்று குவித்த பேர்வழிகள், கடைகளைச் சூறையாடிக் கொள்ளை அடித்தவர்கள். இந்தப் படுகொலைகளை ராஜீவ் காந்தி இப்படி நியாயப்படுத்தினார்: ‘ஒரு பெரிய மரம் விழுந்தால் நிலம் அதிரத்தான் செய்யும்’. மரம் மட்டுமல்ல, மரத்தின் கனத்துக்கு மயிர் விழுந்தாலும் நிலம் அதிரும் என்பது அவருக்குத் தெரியாது.
இதன் பின் நிகழ்ந்த மிகப்பெரும் திட்டமிடப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட பயங்கரவாதமாக 1992 டிசம்பர் 6 அயோத்தி பாபர் மசூதி இடிப்பும் அதனைத் தொடர்ந்த முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. கொலைவெறித்தாண்டவமும், இதற்கு எதிர்வினையாக நாடெங்கும் நடந்த குண்டுவெடிப்புக்களும்.  இந்த கொலைதாண்டவத்துக்கு தலைமை தாங்கி நடத்தியவர் பிற்காலத்தில் இந்தியாவின் உள்துறை அமைச்சராகவும், துணைப்பிரதமராகவும், அதன் பின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித்தலைவருமாக அதிக பட்ச இசட் பிரிவு பாதுகாப்புடன் ஊர் சுற்றுகின்றார்.  இந்த நபர் இப்போது தானே அடுத்த பிரதமர் என்ற கனவுடன் ஊர் ஊராக பிரச்சாரம் செய்து வருகின்றார்.  ஆனாலும் ஆச்சரியம் இல்லை.  இந்திய ஜனநாயகம் இதை அனுமதித்துள்ளது. பாரத் மாதா கீ ஜே!  தொடர்ச்சியாக, ஒரிசாவில் ஸ்டெயின்ஸ் பாதிரியாரையும் அவர் பிள்ளைகளையும் வைக்கோல் போரில் போட்டு உயிரோடு கொளுத்தியது, அதே ஒரிசாவிலும் குஜராத்திலும்  கிறித்துவ, முஸ்லிம் மக்களை நடு வீதியில் கத்தியால் கிழிப்பது, அவர்கள் பெண்களை கூட்டாக வன்புணர்ச்சி செய்வது, நிர்வாணமாக ஊர்வலம் வரச்செய்வது, கர்ப்பிணியாக இருந்தால் வயிற்றைக் கிழித்து சிசுவை தீயில் போட்டு வாட்டுவது, சிறுவர் சிறுமிகளை அறுத்து எறிவது எனத் தொடரும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., பஜ்ரங் தள், விஷ்வ இந்து பரிஷத், சிவ சேனா போன்ற பயங்கரவாத இயக்கங்களைப் பற்றிப் பேசாமல் இந்தியாவில் பயங்கரவாதம் பற்றிய விவாதம் முழுமை பெறாது.  


ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஆட்சியில் இருந்தபோது,  தான் ஆட்சியில் இல்லாவிட்டலும் எதிர்காலத்தில் இந்திய அரசு எந்திரத்தை தனது இந்துதுவா ஆசாமிகள் நடத்த வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன், பல்கலைக்கழக மானியக்குழு, இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐ.சி.ஹெச்.ஆர்), இந்திய தொல்லியல் துறை, உயர்கல்விக்கான பாடத்திட்டங்களை வடிவமைக்கின்ற குழுக்கள், நீதிமன்ற நீதிபதிகள், ராணுவத்தின் உயர் அதிகாரிகள் என முக்கிய இடங்களில் இந்துதுவா ஆர்.எஸ்.எஸ். வெறியர்களைக் கொண்டு திட்டமிட்டு நிரப்பியது ஆர்.எஸ்.எஸ். கும்பல்.  தேசத்தின் கல்வி, கலாச்சார, நீதி நிர்வாக, அறிவுசார் துறைகளைக் கைப்பற்றுவதில் ஆர்.எஸ்.எஸ். கும்பல் வெற்றி பெற்றது.  அன்றைக்கு இது பற்றி தொடர்ந்து பேசிய இடதுசாரிகள், கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் ஆதரவுடன் இருந்த ஒரு ஆட்சியின் காலத்தில் (ஐக்கிய முற்போக்கு கூட்டணி-1) இது பற்றி எதுவுமே பேசவில்லை, இத்தகைய நபர்களைக் களையெடுக்க குரல் கொடுக்கவும் இல்லை, சிறிதளவு முயற்சியையும் கூட செய்யவில்லை என்பது கவலைக்குரிய விசயம்.  எனவே கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய ஆட்சியை நடத்தியது, இப்போதும் நடத்துவது ஆர்.எஸ்.எஸ். ஆட்கள்தான், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அல்ல என்று சொன்னால் தவறில்லை, உரக்கவே சொல்லலாம்.  நாம் வாய் மூடி மவுனமாக இருந்தால் எதிர்காலத்திலும் அவர்கள்தான் நடத்துவார்கள்.

 மாலேகாவ் குண்டு வெடிப்பையும், தமிழகத்தின் தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பையும் நடத்தியவர்கள் ஆர்.எஸ்.எஸ். பேர்வழிகளே என்று இப்போது தெரிகின்றது, பேசப்படுகின்றது.  ஆனால், காஷ்மீரில் போலி என்கவுன்டர்களை நடத்தி அப்பாவி 16, 17 வயது முஸ்லிம் பையன்களை சுட்டு வீழ்த்தி தங்களது பதவி உயர்வுக்கு வழி செய்து கொண்ட இந்துத்துவா ராணுவ அதிகாரிகளைப் பற்றி சில காலம் முன்பு செய்தி வந்தது.  ஆனால் இது பற்றி அதன் பின் எந்த விதமான தகவலும் இல்லை.  மாலேகாவ் குண்டுவெடிப்பைப் போலவே, தென்காசி குண்டுவெடிப்பைப் போலவே, இந்த போலி என்கவுன்டர் + பதவி உயர்வுது குறித்தும், இதுவரை நிகழ்த்தப்பட்ட ராணுவ, போலீஸ் துப்பாக்கிச்சூடுகள், என்கவுன்டர்களில் எங்கேயெல்லாம் முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டார்களோ அவை அனைத்தையும் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கேட்பதிலும் நியாயம் உள்ளது. 


இந்திய பயங்கரவாதத்தின் தொடக்கப்புள்ளி 1948 ஜனவரி 20 என்றால், நவீன கால உலகளாவிய பயங்கரவாதத்தை எங்கே இருந்து பேசத் தொடங்குவது?  

....தொடரும்.

கருத்துகள் இல்லை: