வெள்ளி, நவம்பர் 25, 2011

கலயத்தில் உறங்கும் சாம்பலும் ஒரு ஜோடி காலணிகளும்-7 (இறுதிப்பகுதி)


நமது மக்கள் அப்பாவிகள். தீவிரவாதிகள் என்றால் கறுப்பு நிறத்துடன், சவரம் செய்யப்படாத முகத்துடன், முக்கியமாக தாடியுடன், அழுக்கு உடையுடன், கையில் ஏ.கே.47 துப்பாக்கி, மார்பில் சுற்றப்பட்ட தோட்டா மேகசைன், கழுத் தில் சயனைடு குப்பியுடன், உருது பேசுபவனாக இருப்ப தாகவே நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். தீவிரவாதிகள் வெள்ளைநிறத்துடன், சுத்தமாக சவரம் செய்யப்பட்டு அழகாக, லாஹூர் கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற வனாக, இலக்கணம் தப்பாமல் ஆங்கிலம் பேசுபவனாக, முன்னாள் துணைப்பிரதமர்களாக, நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவராக, எதிர்கால பிரதமர் கனவுகளுடன் அதிக பட்ச இசட் பிரிவு போலீஸ் பாதுகாப்புடன் வலம் வருபவர் களாகவும் இருக்கின்றார்கள் என்பதை நம் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கின்றது.

இறுதியாக, தனது பதவிக்காலத்தின் இறுதியில் இராக் நாட்டிற்கு சென்ற அமெரிக்க பயங்கரவாதி ஜார்ஜ் புஷ் மீது, முன்டாசர் என்ற அந்த இராக் பத்திரிகையாளன் 'பத்திரிகையாளன்' என்ற மரபு மீறி தனது ஒரு ஜோடி காலணிகளையும் ஏன் வீசி எறிந்தான் என்பது குறித்தும், அவன் பணி புரிந்த பத்திரிகையின் ஆசிரியர் "முன்டாசர் ஒரு வீரம் மிக்க அரபு தேச பக்தன்; அவன் தேச பக்த உணர்வில்தான் அத்தகைய காரியத்தை செய்தான்" என்று பெருமைப்பட்டதையும், அரபுப் பிராந்திய மக்கள் ஏன் உணர்ச்சிவசப்பட்டு முன்டாசரை வாழ்த்துகின்றார்கள் என்பது பற்றியும் நமது மக்களுக்கு, குறிப்பாக நமது இந்திய ஊடக முதலாளி களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் ஊடக நண்பர்களுக்கும் சொல்ல வேண்டியிருக்கின்றது.

இவை அனைத்தையும் பேசாமல், பொத்தாம் பொதுவாக பயங்கரவாதம் பற்றிப் பேசுவதும், மனிதாபிமானம், 'நாமெல்லாம் ஒற்றுமையா இருக்கணும்' என்று அடிச்சு விடு வதும், வெடிகுண்டுகள் வெடித்தபின் அந்த இடத்தைக் கழுவிவிட்டு, டி.வி.காமிராக்கள் வந்தவுடன் கையிலிருக் கின்ற மெழுகுவர்த்தியை ஏற்றுவதும், செத்துப்போன போலீஸ் அதிகாரிகள் 'தேஷ்பக்தர்'கள் என்று கோஷம் போடு வதும், அவர்கள் சாவில் சந்தேகம் இருப்பதாக யாராவது சொன்னால் உடனடியாக 'நீ தேச விரோதி' என்று கூச்சல் போடுவதும், ஒவ்வொரு முறை குண்டுவெடித்த பின்னாலும் டி.வி.சானல்களில் ஜாக்கிரதையாக காங்கிரஸ்-ஆர்.எஸ்.எஸ். வகையறா ஆட்களை உட்கார வைத்து பொத்தாம் பொதுவாக தேஷ்பக்தி பேசி "நாங்க வேற வேற கட்சின்னாலும் தேஷ் பக்தின்னா ஒண்ணா இருப்போம், பாருங்க" என்று பீத்திக் கொள்வதும், 'மீண்டும் அடுத்தவாரம் இதே நேரத்தில் மீண்டும் ஒரு குண்டுவெடிப்பின்போது சந்திப்போம்' என்று வணக்கம் கூறி விடை பெறுவதும் எதுக்கும் பிரயோசனப் படாது.

(நன்றி: புதுவிசை ஜனவரி-மார்ச் 2009)
*****************************************

இக்கட்டுரை எழுதப்பட்டது 2008 நவம்பர் தாக்குதலுக்குப் பின். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் போது குஜராத் மாநில காவல்துறையில் அடிசனல் டி.ஜி.பி. ஆக இருந்த ஸ்ரீகுமார், 2002 இஸ்லாமியர்களுக்கு எதிரான படுகொலைகளின் போது உளவுத்துறை டி.ஜி.பி. ஆக இருந்தார்.  நரேந்திரமோடி இந்துமத வெறியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்று ஸ்ரீகுமார் நானாவதி-ஷா கமிசன் முன்பு வாக்குமூலம் தந்ததை அடுத்து அவருக்கு டி.ஜி.பி. பதவி உயர்வை மோடி மறுத்தார். பின்னர் இருவேறு வழக்கு மன்றங்களிலும் வென்ற ஸ்ரீகுமாருக்கு பதவி உயர்வு கிடைத்தது.

இப்போது சஞ்சீவ் பட் என்ற ஐ.பி.எஸ் அதிகாரி, கலவரங்களின்போது மோடி வீட்டில் நடந்த கூட்டத்தில் தான் கலந்து கொண்டதாகவும்,  ‘ இஸ்லாமியர்களுகு எதிராக இந்து மத வெறியர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தும்போது போலீஸ்காரர்கள் கை கட்டி வேடிக்கை பார்க்க வேண்டும்’ என்று மோடி உத்தரவிட்டதற்கு தான் ஒரு சாட்சி என்று சொன்னதால் இப்போது அவரை மோடி அரசு பந்தாடுகின்றது, அவருக்கு மனநிலை சரியில்லை என்று சொல்கின்றது.

நான்கு நாட்களுக்கு முன்பு வந்த தீர்ப்பு ஒன்று, இஷ்ரத் ஜஹான், சொராபுதீன் ஷேக் உள்ளிட்ட அப்பாவி நான்குபேர் குஜராத் போலீசால் சுட்டுக்கொல்லப்பட்ட பின் அவர்களது பிணங்களை அதே போலீஸ் நடுரோட்டில் போட்டு ‘மோடியை சுட்டுக்கொல்ல வந்த நபர்களை என்கவுண்டரில் சுட்டுக்கொன்றதாக’ சொன்னது வடிகட்டிய பொய் என்று சொல்கின்றது.

குஜராத் குல்பர்க் சொசைட்டியில் தன் மனைவி, மக்கள் முன் இந்துமத வெறியர்களால் கண்டதுண்டமாக வெட்டிக் கொல்லப்பட்ட இஷான் ஜாஃப்ரி என்ற முதியவரின் குடும்பம் இன்றைக்கும் நீதி வேண்டி தெருத்தெருவாக அலைகின்ற்து.  இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மதச்சார்பின்மைகோட்பாடு பற்றியும் சகோதரத்துவம் பற்றியும் நீட்டி முழக்கி பேசுகின்றது, அத்தகைய ஒரு அரசியல் சட்டத்தின் பெயரால் பதவியில் இருக்கின்ற நபர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான அரசு பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது என்ன வகை ஜனநாயகம் என்பதை தெரிந்தவர்கள் சொல்ல வேண்டும்.


காஸ்மீரிலும் மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் பாரத்மாதாவின் ராணுவ வீரர்கள் இன்றைக்கும் ‘தேசப்பாதுகாப்பு’ ’அரசியல் சட்டம்’ என்ற பெயரில் மத்திய அரசின் ஆசியோடும் பாரத்மாதாவின் தேஷத்தைக் காப்பாத்த மட்டுமே அவதாரம் எடுத்துள்ள, மெடல்களை வரிசையாக மார்பில் குத்தி சாகசம் காட்டும் ராணுவ அதிகாரிகளின் ஆசியோடும் நடத்தும் கொலைகள், ஆட்கடத்தல், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் ஆகியன இந்திய அரசு சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தும் அரசு பயங்கரவாதம் இல்லையென்றால் வேறு என்ன என்று தெரிந்தவர்கள் சொல்லலாம்.

இறுதியாக, 1947 ஆகஸ்ட் 15 நள்ளிரவில் புதிய இந்தியா பிறப்பதாக ஜவஹர்லால் நேரு குதூகலித்த கணத்தில் அதற்கு அடியுரமாக இருந்த அந்த அரை நிர்வாணக்கிழவன் எங்கே இருந்தான், ஏன் புது தில்லியில் இல்லை என்ற கேள்வியுடனும்,

'அட நீங்க வேற, ஜனநாயகம், மத நல்லிணக்கம், சகோதரத்துவம்.. அப்படியெல்லாம் ஒரு எழவும் இங்க இல்லை, எல்லாம் வெத்து டப்பா.  கட்டுரையில் சொன்னபடி இந்த தேசம் இந்துத்வா வலதுசாரிகளால்தான் ஆளப்படுகின்றது, அரசு எந்திரம் முழுக்கவும் இந்துத்துவா மயம் ஆக்கப்பட்டு ஆண்டுகள் பல ஓடி விட்டன, இங்கே தலித்துக்களுக்கும் இஸ்லாமியர்கள் கிறித்துவர்களுக்கும் முழு ஜனநாயகம், நூறு சதவீத சமத்துவம் இருப்பதாக சொல்லப்படுவதெல்லாம் பம்மாத்து, மூணு சீட்டு வெளயாட்டு சார்!’ என்று நீங்கள் சொன்னால் இந்தக் கேள்வியோடும் என் கட்டுரையை முடிகின்றேன்: ‘அப்புறம் என்ன மயிருக்கு, யார காப்பாத்த இந்த சட்டம்? யாருக்கு இந்த தேசம்?’.

********************************


வியாழன், நவம்பர் 24, 2011

கலயத்தில் உறங்கும் சாம்பலும் ஒரு ஜோடி காலணிகளும்-6



(புனாவில் உள்ள கோபால் கோட்சேவின் வீட்டில், நாதுராம் கோட்சேவின் சாம்பல் ஏன் இன்னும் கரைக்கப்படாமல் கலயத் தில் உறங்குகின்றது என்று பேச வேண்டியுள்ளது; 'ராமருக்கு கோவில் கட்டுவதாக மசூதியை இடித்தவர்கள், ஐந்து வருடம் முழுமையாக ஆட்சியில் இருந்தபோதும் ஏன் கட்டவில்லை?' என்று கேட்க வேண்டியுள்ளது; கடந்த ஐந்து வருடங்களாக காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த பல தேசவிரோத, மக்கள் விரோத மசோதாக்களை நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் அப்படியே நிறைவேற்றும் வண்ணம் அவையில் கூச்சல் குழப்பத்தை உண்டுபண்ண பாரதீய ஜனதாக் கட்சி காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் எவ்வளவு அன்பளிப்பாகப் பெறுகின்றது என்பது பற்றியும், இரண்டு கட்சிகளுக்கும் இடையே திரைமறைவில் இருக்கின்ற கள்ள உறவு பற்றியும் பேச வேண்டியிருக்கின்றது)



2001 செப் 11 அமெரிக்காவில் அல்-காய்தா தாக்குதலுக்கு பின்பு "நியூஸ் வீக்" (24.9.2001) பத்திரிகை இப்படி எழுதியது: "சி.ஐ.ஏ. வின் மிக முக்கிய அதிகாரிகள் செப்.11 அன்று காலையில் திட்ட மிடப்பட்டிருந்த தமது பயணங்கள் அனைத்தையும் ரத்து செய்தார்கள். பாதுகாப்புக் காரணங்களுக்காக என்று மட்டும் கூறப்பட்டது". "வாஷிங்டன் போஸ்ட்" (மே 2002) இப்படி எழுதியது: "2001 கோடைகாலத்தில், அமெரிக்க அட்டர்னி ஜெனரல் ஜான் ஆஷ்க்ராப்ட், இனிமேல் பொதுவான பயணிகள் விமானத்தில் பயணம் செய்யக்கூடாது என அமெரிக்க அரசு முடிவு செய்தது - பாதுகாப்புக் காரணங்களுக்காக என்று மட்டும் கூறப்பட்டது". அவையன்றி, அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளிகளான இஸ்ரேல், ஜெர்மனி ஆகியவற்றுடன், எகிப்து, ரஷ்யா ஆகிய நாடுகளும், 2001 செப்டம்பர் மாதத்துக்கு வெகுமுன்பே, "அமெரிக்காவில் தீவிரவாதிகளின் தாக்குதல் நடத்தப்படலாம், ஒரு பயணிகள் விமானம் இதற்காகப் பயன் படுத்தப்படக்கூடும்"என்றே அமெரிக்க அரசை எச்சரிக்கை செய்திருந்தார்கள் (தகவல்: www.wsws.org). அப்படியெனில், அல்-காய்தா தன் நாட்டின் மக்களைக் கொல்லட்டும் என்று ஜார்ஜ் புஷ் ஏன் காத்திருந்தார், உள்நோக்கம் என்ன என்ற மையமான கேள்விக்கு விடை கண்டால் மட்டுமே உலகளாவிய பயங்கரவாதம் குறித்து மேற்கொண்டு பேச முடியும்.

அதேபோல், மும்பை மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற உளவுத்துறை தகவல் கிடைத்த பின்னும் இந்திய ராணுவமோ போலீஸ் துறையோ, இன்று வெற்றுச்சவால்களை அள்ளி வீசும் டெல்லி சூரப்புலிகளோ ஏன் தற்காப்பு எச்சரிக்கை நடவடிக்கை களை மேற்கொள்ளவில்லை, உள்நோக்கம் என்ன என்ற மையமான கேள்விக்கு விடை கண்டால் மட்டுமே இந்தியாவில் பயங்கரவாதம் குறித்து மேற்கொண்டு பேச முடியும்.

புனாவில் உள்ள கோபால் கோட்சேவின் வீட்டில், நாதுராம் கோட்சேவின் சாம்பல் ஏன் இன்னும் கரைக்கப்படாமல் கலயத் தில் உறங்குகின்றது என்று பேச வேண்டியுள்ளது;'ராமருக்கு கோவில் கட்டுவதாக மசூதியை இடித்தவர்கள், ஐந்து வருடம் முழுமையாக ஆட்சியில் இருந்தபோதும் ஏன் கட்டவில்லை?' என்று கேட்க வேண்டியுள்ளது; கடந்த ஐந்து வருடங்களாக காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த பல தேசவிரோத, மக்கள் விரோத மசோதாக்களை நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் அப்படியே நிறைவேற்றும் வண்ணம் அவையில் கூச்சல் குழப்பத்தை உண்டுபண்ண பாரதீய ஜனதாக் கட்சி காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் எவ்வளவு அன்பளிப்பாகப் பெறுகின்றது என்பது பற்றியும், இரண்டு கட்சிகளுக்கும் இடையே திரைமறைவில் இருக்கின்ற கள்ள உறவு பற்றியும் பேச வேண்டியிருக்கின்றது. விடுதலை பெற்ற அடுத்த வருடமே,காங்கிரஸ்காரர்கள் காஷ்மீரில் ராணுவ ஜீப் வாங்கிய விசயத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் ஊழலைத் தொடங்கி வைத்து காந்தியடிகளுக்கு மகத்தானஅஞ்சலி செலுத் தினார்கள். பாரத் மாதாவின் நேரடி வாரீசுகளான ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. தீவிரவாதிகளோ கார்கில் போரில் இறந்துபோன இந்திய ராணுவ வீரர்களின் உடல்களை எடுத்து வர சவப்பெட்டி வாங்கியதில் செய்த ஊழலும், டெஹல்கா பத்திரிகையாளர் களால் கேமராவில் படம் பிடிக்கப்பட்ட, பி.ஜே.பி.தலைவர் பங்காரு லட்சுமணனும் பதவியில் இருக்கின்ற ராணுவ அதிகாரிகளும் கூட்டணி அமைத்து கட்டுக்கட்டாக பணத்தை அமுக்கியதைக் காட்டும் ஆயுதபேர ஊழலும் தெருவுக்கு தெரு நாறியது. இவர்களின் லஞ்சலாவண்யப் பட்டியல் பக்கம் பக்கமாகப் போகும். இது ஒரு பானைச் சோற்றில் ஒரு சோறு மட்டுமே. தனித்தனியே கொள்ளை அடித்தது போதாது என்று, 2008 ஜூலை மாதம் நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, காங்கிரஸ், பி.ஜே.பி. இரண்டு பேருமே ரிலையன்ஸ் முதலாளி அம்பானியின் பணத்தை நாட்டுமக்களுக்குத் தெரியும்படி பகிரங்கமாகப் பங்கு போட்டுக்கொண்ட நேரடி ஒளிபரப்பை இந்திய மக்கள் பார்த்து "இவங்க எவ்வளவு நல்லவங்க" என்று பரவசம் அடைந்தார்கள். ஆக இரண்டு பேருமே தேஷ்பக்தி வேஷம் போட்டுக்கொண்டே இந்தியக்குடிமகனின் ஒவ்வொரு பைசாவையும் கூச்சநாச்சமின்றி நக்கித் தின்கிறவர்கள் என்பது வெட்டவெளிச்சம். இந்த லட்சணத்தில் இவர்கள்தான் பயங் கரவாதத்தை ஒழித்துவிடுவோம் என்று தெருத்தெருவாக ஓலமிடுகின்றார்கள்! நாம் நம்ப வேண்டுமாம்!

....தொடரும்

புதன், நவம்பர் 23, 2011

கலயத்தில் உறங்கும் சாம்பலும் ஒரு ஜோடி காலணிகளும்-5






(ஒட்டுமொத்த இந்திய அரசு எந்திரமும் இந்துமயமாக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்.இன்  "ஒரு மதம்ஒரு தேசம்ஒரு கலாச்சாரம்ஒரு மொழி" என்ற கொள்கை இந்த இந்துத் துவாவாதிகளின் அரசு எந்திரத்தால் தீவிரமாக அமலாக்கப் பட்டு வருகின்றதுஇது இந்திய அரசே சிறுபான்மை மத மக்கள் மீது நடத்தும் அரசு பயங்கர வாதம் என்று சொன்னால் என்ன தவறு?  இங்கே காங்கிரஸ் அரசு, பா.ஜ.க. அரசு என்று கொள்ள வேண்டாம், இந்திய அரசு எந்திரம் என்று சொல்கின்றேன்)


உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய மக்களை இப்படி வலுக் கட்டாயமாக எதிரியாக்கியது அமெரிக்க பயங்கரவாதத்தின் வரலாறு எனில், இந்தியாவில் உள்ள இஸ்லாமிய மக்களை வலுக்கட்டாயமாக எதிரியாக்கியது ஆர்.எஸ்.எஸ்., ஜனசங் ஆகிய இந்துத்துவா பயங்கரவாதிகளைச் சாரும். ஹெட்கே ராம் பாலிவார், கோல்வாகர், வீரசவர்க்கார், நாதுராம் கோட்சே வழியாக, ஷ்யாம ப்ரஸாத் முகர்ஜி, சுதர்சன், வாஜ்பேயி, அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, ப்ரவீன் தொகாடியா, நரேந்திர மோடி, பால் தாக்கரே, ராஜ் தாக்கரே, ராம் கோபாலன், சோ ராமஸ்வாமி, இல.கணேசன் போன்ற தீவிர வாதிகளால் தொடர்ந்து இந்த "எதிரியாக்கல்" என்ற அஜெண்டா முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது பூட்டிக்கிடந்த பாபர் மசூதியைத் திறந்து இந்துத்துவா பயங்கரவாதிகள் பூஜை செய்ய அனுமதித்த அன்றைக்கு இவர்களின் வெற்றிப் பயணம் தொடங்கியது எனலாம். ஆனால் நாலுசுவருக்குள் வெறும் பூஜை மட்டுமே செய்து கொண்டிருந்தால் போதுமா? வி.பி.சிங் ஆட்சியின்போது அமலாக்கப்பட்ட மண்டல் கமிஷன் அறிக்கையை ஒரு ஆயுதமாகக் கையில் எடுத்தது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. கும்பல். தொடர்ந்து அயோத்தியில் கோவில் கட்ட தனது ரத்தயாத்திரையை நடத்தினார் அத்வானி. பீஹாரில் முதல்வராக இருந்த லல்லு பிரசாத் யாதவ் அத்வானியைக் கைது செய்ய, வி.பி.சிங் அரசுக்கான தனது ஆதரவை அத்வானி விலக்கிக்கொள்ள, மானம் என்ற வேட்டியே பெரிது என பதவித்துண்டைத் தூக்கி வீசி எறிந்து விட்டு கம்பீரமாக வெளியேறினார் வி.பி.சிங் (வேறு யாராவது நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல).

தொடர்ந்து வந்த தேர்தலில் பேசாமடந்தையும் ஒருகாலத்தில் ஆர்.எஸ்.எஸ்.இல் உறுப்பினராக இருந்தவருமான நரசிம்ம ராவ் பிரதமராக, 1992 டிசம்பர் 6ஆம் நாள் பாபர் மசூதி இடிக்கப்பட்டது, நாடெங்கும் கலவரம் மூண்டது. ஆயிரக் கணக்கானோர் மாண்டனர். மும்பையிலும் கோவையிலும் குண்டு வெடித்தது ("அத்வானியை ஆண்டவன் காப்பாற்றி னான்"-ரஜினிகாந்த்). இஸ்லாமியர்களை 'வலுக்கட்டாயமாக எதிரி'யாக்குவதில் ஆர்.எஸ்.எஸ். கும்பல் வெற்றி கண்டது. முதலில் 'சர்ச்சைக்குரிய இடம்' என்று சொல்லி வந்த பத்திரிகைகளும் டி.வி.சானல்களும் நாட்கள் ஓடஓட ராமர் கோவில் என்றே எழுதவும் பிரச்சாரம் செய்யவும் தொடங்கி னார்கள். இப்போது 'சர்ச்சைக்குரிய இடம்' என்ற சொல் ஊடகங்களில் மறைந்துவிட்டது. அடுத்துவந்த வருடங்களில், டிசம்பர் 6 தேதியில் (இப்போது நவம்பர் 26 அன்றும்) வேண்டுமென்றே செய்யப்படும் போலீஸ் கெடுபிடிகளால் பொதுமக்கள் மத்தியில் இஸ்லாமிய மக்கள்மீது வெறுப்புணர்வு திட்டமிட்டு வளர்க்கப் பட்டது.

பூட்டு ரிப்பேர், குடை ரிப்பேர், பீடி சுற்றுவது, கைத்தறி நெசவு, பாய் முடைவது, கத்தி சாணை தீட்டுவது, மீன், கருவாடு, மாமிச விற்பனை, மிஞ்சிப்போனால் பெட்டிக் கடை அல்லது வெளிநாட்டில் கூலிவேலை என்று இந்திய சமூகத்தின் விளிம்புநிலைத் தொழில்களைச் செய்து தமது அன்றாட உணவுக்கான வழியை ஏற்படுத்திக் கொண்டிருக் கும் ஒரு சமூகத்தின் மீது 'தீவிரவாதிகள்' என்ற முத்திரை குத்தப்படுவதற்கு ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பு வழியைக் காட்டியது எனில், அதன் சார்பு செய்தித்தாள்களும் டி.வி.சானல்களும், விஜயகாந்த், அர்ஜூன் போன்ற 'தேஷ் பக்த' நடிகர்களின் திரைப்படங்களும் பெருமளவு அந்த வழி யில் தொடர்ந்து ஜாக்கிரதையாக ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரத்தை முன்னெடுத்து சென்று கொண்டிருக்கின்றது.

இஸ்லாமிய சமூகத்தின் இன்றைய அவலமான நிலைமையையும் பொரு ளாதார நிலைமையையும் சொல்லும் ராஜீந்தர் சச்சார் கண்டறி தல்களையும் அவரது அறிக்கையையும் வெறுப்புடன் பார்க்கின்றார்கள். கட்டுரையின் ஒரு இடத்தில் சொன்னது போல, இந்திராகாந்தியோ, ராஜீவ்காந்தியோ, நரசிம்மராவோ, வாஜ்பேயியோ, இப்போதுள்ள மன்மோஹன்சிங்கோ, ஆட்சியில் யார் இருந்தாலும் உண்மையில் இந்திய அரசு எந்திரத்தை ஓட்டிக்கொண்டிருப்பது இந்துத்துவாவாதிகளே. இதையும் மீறி ஹேமந்த் கார்காரே போன்ற போலீஸ் அதிகாரிகள் உண்மையைத் தேடிப்போனால் அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் கொடுக்கப்படும் தொல்லை மிகப் பயங் கரமானது, பைத்தியம் பிடிக்க வைப்பது. ஒட்டுமொத்த இந்திய அரசு எந்திரமும் இந்துமயமாக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்.இன் "ஒரு மதம், ஒரு தேசம், ஒரு கலாச்சாரம், ஒரு மொழி" என்ற கொள்கை இந்த இந்துத் துவாவாதிகளின் அரசு எந்திரத்தால் தீவிரமாக அமலாக்கப் பட்டு வருகின்றது. போலீசிலும் ராணுவத்திலும் முக்கிய அதிகாரிகளாக இருக்கின்ற பலர், பதவி ஓய்வு பெற்ற மறுநாளே பி.ஜே.பி. யில் சேர்ந்துவிடுகின்றார்கள் என்பது இந்த வாதத்தை வலு வாக்குகின்ற வெட்டவெளிச்சமான ஆதாரம். இதுபோன்ற அதிகாரிகள் தமது பதவிக்காலத்தில் யாருக்கு ஆதரவாக, யாருக்கு எதிராக இருந்திருப்பார்கள்? பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில் ஓரிருவர் மட்டுமே இந்து மதத்தைச் சேர்ந்தவர்களென்பதும் மற்ற அனைவரும் முஸ்லிம்களே என்பதும் இத்தோடு இணைத்துப் பார்க்கப்பட வேண்டிய ஒன்று. இது முக்கியமான கேள்வி.


ராணுவத்தின் முக்கிய ஆயுதங்கள், கருவிகள், போர்த்தளவாடங்கள், கட்டி டங்கள் அனைத்துக்கும் ராமாயண, மஹாபாரத பக்கங்களி லிருந்துதான் சம்ஸ்கிருதப் பெயர்கள் வைக்கப்படுகின்றன. பல உதாரணங்களைக் கூறமுடியும். ரஷ்யாவில் இருந்து ட்டீ-90 ரக போர் டாங்குகள் வாங்கி "பீஷ்மர்" என்று பெயர் வைத்தார்கள்! எங்கே இருக்கின்றது மதச்சார்பின்மை? அரசு அலுவலகங்களில் பஜனைகள் (தவறாமல் வெள்ளிக்கிழமை) ஒலிக்கின்றன. சமீப காலங்களில் ஆயுதபூஜை மிகத்தீவிர மாகக் கொண்டாடப்படுகிறது. இந்திய அரசு அலுவலகங்க ளில் பணியாற்றும் சிறுபான்மை மத மக்கள் (தலித்களையும் சேர்த்து) "நாம் பணி செய்வது ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டின் அலுவலகத்தில்" என்று நம்ப வேண்டுமா? இது இந்திய அரசே சிறுபான்மை மத மக்கள் மீது நடத்தும் பயங்கர வாதம் என்று சொன்னால் என்ன தவறு? இந்திய மக்களின் பணத்தில் சம்பளம் வாங்குகின்ற ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி "பகவத் கீதைதான் இந்த நாட்டின் தர்ம நியாய சட்டமாக இருக்க வேண்டும்" என்று கொக்கரிக்கின்றார்; சேது சமுத்திர விவகாரத்தில் மத்திய சட்டஅமைச்சர் "கடவுள் ராமர் இருப் பது சந்தேகத்துக்கு இடமற்ற ஒன்று; ராமர், இந்திய கலாச் சாரத்தின் பிரிக்க முடியாத ஒரு பகுதி" என்று முழக்கமிடு கின்றார், இவர்கள்தான் சிறுபான்மை மத மக்களையும், இந்து மதத்திலேயே இருக்கின்ற தலித்துகளையும் காப்பாற்றுவார் கள் என்று நம்ப வேண்டுமா? ஒரு பந்த் நடந்தபோது "தமிழ் நாட்டில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்" என்று கூரைமீது ஏறி நின்று கோஷம் போட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஒரிசாவிலும் குஜராத்திலும் முஸ்லிம், கிறித்துவ மக்களின் கழுத்தும் வயிறும் அறுக்கப்பட்ட போதும், முஸ்லிம், கிறித்துவ பெண்கள் கூட்டமாக வன்புணர்ச்சிக்கு உள்ளானபோதும், கயர்லாஞ்சியில் போட்மாங்கே என்ற தலித் குடும்பத்தினர் உயர்சாதி இந்துக்களால் படுகொலை செய்யப்பட்டபோதும் எங்கே போனார்கள்?






...தொடரும்

செவ்வாய், நவம்பர் 22, 2011

கலயத்தில் உறங்கும் சாம்பலும் ஒரு ஜோடி காலணிகளும்-4






 ( 9/11ஆல் உண்மையில் பயனடைந்தவர்கள் யார்?  மூவர்தான்.  அல்-காய்தாவும் அமெரிக்க ஆயுத உற்பத்தி முதலாளிகளும் அவர்களது கூட்டாளிகளான குடியரசுக்கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகளும்தான்)

மும்பை தாக்குதலின் உச்சகட்ட துயரமே உலகளாவிய பயங்கரவாதத்தின் தாய்வீடான அமெரிக்காவின் மந்திரி காண்டோலிசா ரைஸ் இந்தியாவுக்கு வந்ததுதான். அப்படியே பாகிஷ்தானுக்கும் போனார். நரிய  காவலுக்கு வச்சா கிடைக்கு ரெண்டு ஆடு வேணும்ணு கேக்குமாம்.


ஆக இஸ்லாமிய நாடுகளின் மீதான படை எடுப்புக்கான எதிர்வினை என்பது அமெரிக்காவுக்கும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் எதிரான இஸ்லாமிய மக்களின் கோபம் என்ற புள்ளியில் தொடங்கி அதன் நீட்சியாக இன்று அமெரிக்காவுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் எதிரான 'இஸ்லாமிய' பயங்கரவாதமாக ஆக்கப்பட்டுள்ளது என்பதுதான் வரலாறு கூறும் உண்மை.  இஸ்லாமிய மக்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதில் வெற்றி பெற்றுள்ள அமெரிக்க சார்பு ஊடகங்கள், "நீ ஏன் அவனை முதலில் அடித்தாய்?" என்ற எளிமையான கேள்வியை அமெரிக்காவிடம் கேட்பதில்லை, ஆனால் சர்வதேச சமுதாயத்துக்கு அந்தக் கடமை உள்ளது.  தான் ஒரு உலக ரவுடி என்ற சுயரூபம் உலக சமுதாயத்தின் முன் அம்பலப்பட்டுப் போனதில் அமெரிக்காவுக்கு வருத்தம் உண்டு; 'உலகளாவிய பயங்கரவாதத்தின் மீது தாக்குதல்' என்ற தனது ஒற்றைத்திட்டத்தின் சதிவலையில் தான் மட்டும் தனித்து நிற்காமல் இந்தியாவையும் இணைப்பதன் மூலம், தனது செயலுக்கு நியாயம் கற்பிக்கலாம்.  இதற்காக தன்னைப் போலவே 'உலகளாவிய பயங்கரவாத'த்தின் மீது தாக்குதல் தொடுக்கக் கூடிய ஒரு கூட்டாளியாக இந்தியாவை மாற்ற அமெரிக்கா பெரும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றது.  இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை இந்த நோக்கில் பார்த்தால் மட்டுமே புரியும்.  'நான் மட்டுமா ரவுடி, அவனும்தான்'.  இதற்கு அமெரிக்கா வைத்துள்ள குறிதான் இந்தியா.   உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, அதாவது மும்பை தாக்குதலை சாக்காக வைத்து, பக்கத்தில் உள்ள பாகிஸ்தான் மீது போர் தொடுக்குமானால், தனது பிரச்சாரத்துக்கு அது ஆதரவாக இருக்கும் என்று அமெரிக்கா கணக்குப் போடுகின்றது.  இதற்காக, இந்தியாவுக்குள் தனது அடிமைகளான ஆர்.எஸ்.எஸ். போன்ற வலதுசாரி இந்துத்துவா அமைப்புக்கள் மூலம் "பாகிஷ்தான் மீது படையெடு!" என்று மக்களிடையே பொதுக்கருத்தை உருவாக்க முனைகின்றது; இந்துத்துவா பயங்கரவாதிகளைக் கொண்டு பத்திரிக்கைகளில் கட்டுரை, ஆசிரியருக்கு கடிதம் எழுதுவது, இன்டெர்நெட்டில் பிரச்சாரம் செய்வது, டி.வி.சானல்களில் வாக்கெடுப்பு நடத்துவது, செல்ஃபோனில் எஸ்.எம்.எஸ். பிரச்சாரம் என பல வகையிலும் பிரச்சாரம் செய்கின்றது.

மார்ச் 2003 தொடங்கி 2006 இறுதி வரை 6,50,000 இராக் மக்களை ஜார்ஜ் புஷ் கொன்று குவித்துள்ளான்.  ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் பொதுசுகாதாரக் கல்வி மையத்தின் கணக்கோ இப்படிக் கூறுகின்றது: "...வருடத்திற்கு 1,43,000 மக்கள் செத்து மடிவார்கள் என மதிப்பிடப் பட்டிருந்தது (மார்ச் 2003க்கு முன்னால்).  ஆனால் இன்றைய கணக்கு உண்மையில் இதை விடவும் அதிகம்".  "பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக நாங்கள் பொய் சொன்னோம்" என அமெரிக்க  கனவான்களே அருள்கூர்ந்து ஒத்துக்கொண்டபின் "அங்கிருந்து வெளியேறு" என்று சொல்ல முடியாத அளவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் நியாயவான்களும் பொதுச்செயலாளரும் இந்தியாவில் இருக்கின்ற அமெரிக்க விசுவாசிகளும் வாயில் என்ன வைத்திருக்கின்றார்கள் என்பதை திறந்துதான் பார்க்க வேண்டும்.  9/11ஆல் உண்மையில் பயனடைந்தவர்கள் யார்?  மூவர்தான்.  அல்-காய்தாவும் அமெரிக்க ஆயுத உற்பத்தி முதலாளிகளும் அவர்களது கூட்டாளிகளான குடியரசுக்கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகள்தான். இந்த இடத்தில்,  ஜூலை மாதம் இந்திய நாடளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற ரிலையன்ஸ் முதலாளி அம்பானியின் பணத்தை காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி என  இரண்டு பேரும் பங்கு போட்டுப் பிடித்துக் கொண்டதும், இந்த இரண்டு தேஷ்பக்த கட்சிகளுக்கும் ஏஜெண்டாக ஆயுத வியாபாரியான சமாஜ்வாடி பொதுச்செயலாளர் அமர்சிங் இருந்ததும் உங்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல.

...தொடரும்

திங்கள், நவம்பர் 21, 2011

கலயத்தில் உறங்கும் சாம்பலும் ஒரு ஜோடி காலணிகளும்-3







 ("இராக் நாட்டின் முக்கிய உற்பத்திப்பொருள் ப்ரோக்கோலி மட்டுமே என்றிருந்தால், நீங்கள் உங்களிடம் உள்ள கடைசி டாலர் நோட்டையும் வைத்து தைரியமாக  பந்தயம் கட்டலாம் - புஷ் இராக்கின் மீது படையெடுத்திருக்க மாட்டார்" -பிரிட்டிஷ் பத்திரிக்கையாளரான ராபர்ட் ஃபிஸ்க்)




ஸ்பானிய மன்னனின் வேட்டை நாயான கொலம்பஸ், அமெரிக்க மண்ணில் கால் வைத்த நொடியில் இருந்து தொடங்க வேண்டும்.  அதை அமெரிக்க பயங்கரவாதம் என்று சொன்னால் தவறில்லை.  வெள்ளையர்கள் குடியேற வெள்ளை மாளிகையைக் கட்டியவர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து குடியேற்றப் பட்ட கறுப்பு மக்கள் என்பது வரலாறு.  அந்த மாளிகையின் அஸ்திவாரமாக இருப்பது எது?  கொலம்பசால் கொன்று குவிக்கப்பட்ட லட்சக்கணக்கான செவ்விந்திய மக்களின் ரத்தமும் சதையும்.  சூது வாது ஏதும் அறியாத செவ்விந்திய மக்கள், கரையில் இறங்கிய கொலம்பஸ் கும்பலைக் கண்டு ஓடி வந்தபோது, அந்த மக்களை நோக்கி தன்னிடம் இருந்த துப்பாக்கியால் கொலம்பஸ் கண்மூடித்தனமாக சுடத்தொடங்கிய அந்த நொடியில் இருந்துதான் உலகளாவிய பயங்கரவாதம் பற்றிப் பேசத் தொடங்க வேண்டும்.  இயற்கையோடு இசைந்த சுகாதாரமான வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த செவ்விந்திய மக்களுக்கு கொலம்பசும் அவன் கும்பலும் கொடுத்த பரிசு, தாங்கள் எடுத்துச் சென்ற பால்வினை நோய்களும் துப்பாக்கிச்சூடும்தான். எனவே உலகளாவிய பயங்கரவாதத்தைத் தொடங்கி வைத்தது அமெரிக்காதான் என்றால் அது தவறு இல்லை.   இது ஏதோ இன்றைய அரசியல் நிகழ்வுகளில் இருந்து  பின்னோக்கி அமெரிக்காவின் மீது வீண்பழி போடும் முயற்சி அல்ல, நீண்ட நெடிய வரலாற்று உண்மை.   தனது சுயநலனுக்காக எந்த நாட்டின் மீதும் ஆக்கிரமிப்பு நடத்தவும் உயிரியல், ரசாயன, பவுதீக, பொருளாதார.... என அனைத்து ஆயுதங்களையும் பிரயோகிக்க அமெரிக்கா என்றுமே தயங்கியது இல்லை.  1945 ஹிரோஷிமா, நாகசாகி  அணுகுண்டு வீச்சு என்பது உண்மையில் ஒரு சோதனைதான்.  அணுகுண்டு வீசினால் உயிருள்ள மக்களும், பிற உயிரினங்களும், ஜடப்பொருட்களும் என்ன ஆகின்றன என்று சோதித்துப் பார்க்க விரும்பிய அமெரிக்க  பயங்கரவாதிகளுக்கு, சோதனை எலிகளாகத்தான் அன்றைக்கு அப்பாவி ஜப்பானிய மக்கள் பயன்படுத்தப்பட்டார்கள்.  இது அமெரிக்காவின் உலகளாவிய பயங்கரவாதம் இல்லையா?


இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். கும்பல் செய்கின்ற 'பயங்கரவாத' எதிர்ப்பு பிரச்சாரத்திலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்ந்து செய்து வருகின்ற 'பயங்கரவாத' எதிர்ப்பு பிரச்சாரத்திலும் ஒரு குறிப்பிட்ட மதத்தவர் - இஸ்லாமிய மக்கள் - உலகமக்களின் எதிரியாக நிறுத்தப்படுவது, ஒரு 'பொது எதிரியாக’ அடையாளப் படுத்தப்படுவது தற்செயலானதா திட்டமிடப்பட்டதா என்ற கேள்விக்கான பதிலை வரலாறு திட்டவட்டமாக வைத்திருக்கின்றது.


1900த்தின் முற்பகுதியில், ஈரானில் எண்ணெய் வளம் கண்டு பிடிக்கப்பட்ட பின் அமெரிக்க பயங்கரவாதத்தின் இலக்கு அரபுப் பிரதேசத்தின் மீது விழுந்தது.  அதன் நாடு பிடிக்கும் கொள்கை, கூடவே லத்தீன் அமெரிக்க, மத்திய கிழக்கு, அரபு நாடுகளில் ஒரு ரவுடியைப் போல் நுழைந்து கத்தியை வீசுகின்ற பயங்கரவாதப்போக்கு, இந்த நாடுகளின் மக்கள் மத்தியில் அமெரிக்காவுக்கு எதிரான தீராத பகையுணர்வைத் தோற்றுவிக்க காரணமாக இருந்தது.  அமெரிக்காவின் தந்திரமே அதுதான்!  அடுத்தவன் வீட்டுக்குள் அதிரடியாக ஒரு நாய் போல நுழைவது, அவனை வலுக்கட்டாயமாக எதிரியாக்குவது, அவன் திருப்பி அடிக்கும்போது அவனை 'தீவிரவாதி'யாக முத்திரை குத்துவது, 'பயங்கரவாதம்' பற்றி பேசுவது, அதன் பின் தான் ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருக்கும் மறைமுக செயல்திட்டங்களை (அஜெண்டா) அதிவேகமாக நிறைவேற்றுவது!  


இராக்கிலும் ஆஃப்கானிஸ்தானிலும் நுழைவதற்கான திட்டம் ஏற்கனவே அமெரிக்காவிடம் இருந்த திட்டம்தான்.  ஆனால் நுழைவதற்கான வாய்ப்பை, காரணத்தை மட்டும் எதிர்பார்த்திருந்தபோது, அமெரிக்காவால் கொம்பு சீவி வளர்க்கப்பட்ட பின்லாடனும் அல்-காய்தாவும் வழி ஏற்படுத்திக்கொடுத்தார்கள்.  9/11ஐ ஒரு காரணமாகச் சொல்லிக்கொண்டு இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக ஒரு பொய்க்காரணத்தைப் பரப்பி இராக்கில் நுழைந்தது, சதாம் உசேனையும் கொன்றது, இராக்கின் எண்ணெய் எடுக்கும் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டது.  60 வருடங்களுக்கும் மேலாக பாலஸ்தீன மக்களைக் கொன்று குவிக்கும் இஸ்ரேல் என்ற வெறிநாய்க்கு கறிபோடும் எஜமானாக இருப்பது அமெரிக்காவே.  அமெரிக்கா மட்டும் அல்ல, இதர ஐரோப்பிய நாடுகளையும் சொல்லலாம்.  எகிப்தில் நெப்போலியன் ஆக்கிரமிப்பும் அதனைத் தொடர்ந்த எகிப்திய கலாச்சார அழிவும் (கிறிஸ்து பிறப்பதர்கு முந்தைய பழம்பெரும் சின்னமான ஸ்ஃபிங்க்ஸ் சிலையின் முகத்தில் இப்போது நாம் பார்க்கும் வடுக்கள், குழிகள் யாவும் நெப்போலியனின் படைகளால் ஏற்படுத்தப்பட்டவை, தங்கள் பீரங்கிகளால் ஸ்ஃபிங்க்சின் முகத்தை சுட்டார்கள்), அலெக்சான்ட்ரிட்யாவின் புகழ்பெற்ற பண்டைய காலத்து நூலகத்தை அழித்தது, லிபியாவில் முசோலினி ஆக்கிரமிப்பு, அல்ஜீரியாவில் ஃப்ரான்ஸ் ஆக்கிரமிப்பு, பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் அழிச்சாட்டியம், இரானையும் இராக்கையும் மோதவிட்டு ஆயுத விற்பனை செய்த தந்திரம்...எனத் தொடர்கின்றது.  அமெரிக்காவின் நோக்கம் பெட்ரோலியத்தை திருடுவதாக இருக்கலாம், ஆனால் பெட்ரோலிய வள நாடுகள் இயற்கையாகவே இஸ்லாமிய நாடுகளாக  இருக்கும்போது, அங்கே மேற்கத்திய நாடுகளின் ஆக்கிரமிப்பும் அழித்தொழிப்பும் இஸ்லாமிய மண்ணின் கலாச்சார, மத அடையாளங்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பாகவும் அழிவு வேலையாகவும் அமைந்து விடுகின்றது.  அரபு பிராந்திய இஸ்லாமிய மக்களின் கோபத்தைத் தூண்ட முக்கிய காரணமாக இருப்பது, அமெரிக்கா தங்கள் மண்ணில் உள்ள பெட்ரோலியத்தை சுரண்டி எடுப்பது மட்டும் அல்ல - தங்களின் நீண்ட பாரம்பரிய, மத, கலாச்சார அடையாளங்களுடன் கூடிய அன்றாட வாழ்க்கையை சீரழித்ததையும், தங்கள் மண்ணின் மத, கலாச்சார அடையாள சின்னங்களை அழித்ததையும், மொத்தத்தில் அமெரிக்காவின் படையெடுப்பை தங்கள் மதத்தின் மீதான, கலாச்சாரத்தின் மீதான படையெடுப்பாக, இன அழிப்பாக அவர்கள் பார்த்தார்கள், பார்க்கின்றார்கள். 


பிரிட்டிஷ் பத்திரிக்கையாளரான ராபர்ட் ஃபிஸ்க் இவ்வாறு கூறுகின்றார்: "இராக் நாட்டின் முக்கிய உற்பத்திப்பொருள் ப்ரோக்கோலி
மட்டுமே என்றிருந்தால், நீங்கள் உங்களிடம் உள்ள கடைசி டாலர் நோட்டையும் வைத்து தைரியமாக  பந்தயம் கட்டலாம் - புஷ் இராக்கின் மீது படையெடுத்திருக்க மாட்டார்" (டால் டி'மோன்டி எழுதிய கட்டுரை, தி ஹிண்டு, 2008 டிசம்பர் 7).

...தொடரும்




சனி, நவம்பர் 19, 2011

கலயத்தில் உறங்கும் சாம்பலும் ஒரு ஜோடி காலணிகளும்-2





















     

(ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஆட்சியில் இருந்தபோது,  தான் ஆட்சியில் இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் இந்திய அரசு எந்திரத்தை தனது இந்துதுவா ஆசாமிகள் நடத்த வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன், பல்கலைக்கழக மானியக்குழு, இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐ.சி.ஹெச்.ஆர்), இந்திய தொல்லியல் துறை, உயர்கல்விக்கான பாடத்திட்டங்களை வடிவமைக்கின்ற குழுக்கள், நீதிமன்ற நீதிபதிகள், ராணுவத்தின் உயர் அதிகாரிகள் என முக்கிய இடங்களில் இந்துதுவா ஆர்.எஸ்.எஸ். வெறியர்களைக் கொண்டு திட்டமிட்டு நிரப்பியது)


1948 ஜனவரி 20, 31 ஆகியவற்றின் தொடர்ச்சியாக, அடுத்த ஒருங்கிணைக்கப்பட்ட பயங்கரவாத நிகழ்வாக, 1984 இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து சீக்கிய இன மக்களுக்கு எதிரான காங்கிரசார் நடத்திய  கொலைவெறித்தாண்டவத்தை சொல்லலாம்.  இன்று மத்திய ஆட்சியில் மந்திரிகளாக இருக்கின்ற, நுனிநாக்கு ஆங்கிலம் பேசுகின்ற பல கனவான்கள், அன்று டெல்லி வீதிகளில் கத்தியோடும் கட்டாரிகளோடும் பெட்ரோல் கேன்களோடும் பல சீக்கியர்களைக் கொன்று குவித்த பேர்வழிகள், கடைகளைச் சூறையாடிக் கொள்ளை அடித்தவர்கள். இந்தப் படுகொலைகளை ராஜீவ் காந்தி இப்படி நியாயப்படுத்தினார்: ‘ஒரு பெரிய மரம் விழுந்தால் நிலம் அதிரத்தான் செய்யும்’. மரம் மட்டுமல்ல, மரத்தின் கனத்துக்கு மயிர் விழுந்தாலும் நிலம் அதிரும் என்பது அவருக்குத் தெரியாது.
இதன் பின் நிகழ்ந்த மிகப்பெரும் திட்டமிடப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட பயங்கரவாதமாக 1992 டிசம்பர் 6 அயோத்தி பாபர் மசூதி இடிப்பும் அதனைத் தொடர்ந்த முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. கொலைவெறித்தாண்டவமும், இதற்கு எதிர்வினையாக நாடெங்கும் நடந்த குண்டுவெடிப்புக்களும்.  இந்த கொலைதாண்டவத்துக்கு தலைமை தாங்கி நடத்தியவர் பிற்காலத்தில் இந்தியாவின் உள்துறை அமைச்சராகவும், துணைப்பிரதமராகவும், அதன் பின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித்தலைவருமாக அதிக பட்ச இசட் பிரிவு பாதுகாப்புடன் ஊர் சுற்றுகின்றார்.  இந்த நபர் இப்போது தானே அடுத்த பிரதமர் என்ற கனவுடன் ஊர் ஊராக பிரச்சாரம் செய்து வருகின்றார்.  ஆனாலும் ஆச்சரியம் இல்லை.  இந்திய ஜனநாயகம் இதை அனுமதித்துள்ளது. பாரத் மாதா கீ ஜே!  தொடர்ச்சியாக, ஒரிசாவில் ஸ்டெயின்ஸ் பாதிரியாரையும் அவர் பிள்ளைகளையும் வைக்கோல் போரில் போட்டு உயிரோடு கொளுத்தியது, அதே ஒரிசாவிலும் குஜராத்திலும்  கிறித்துவ, முஸ்லிம் மக்களை நடு வீதியில் கத்தியால் கிழிப்பது, அவர்கள் பெண்களை கூட்டாக வன்புணர்ச்சி செய்வது, நிர்வாணமாக ஊர்வலம் வரச்செய்வது, கர்ப்பிணியாக இருந்தால் வயிற்றைக் கிழித்து சிசுவை தீயில் போட்டு வாட்டுவது, சிறுவர் சிறுமிகளை அறுத்து எறிவது எனத் தொடரும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., பஜ்ரங் தள், விஷ்வ இந்து பரிஷத், சிவ சேனா போன்ற பயங்கரவாத இயக்கங்களைப் பற்றிப் பேசாமல் இந்தியாவில் பயங்கரவாதம் பற்றிய விவாதம் முழுமை பெறாது.  


ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஆட்சியில் இருந்தபோது,  தான் ஆட்சியில் இல்லாவிட்டலும் எதிர்காலத்தில் இந்திய அரசு எந்திரத்தை தனது இந்துதுவா ஆசாமிகள் நடத்த வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன், பல்கலைக்கழக மானியக்குழு, இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐ.சி.ஹெச்.ஆர்), இந்திய தொல்லியல் துறை, உயர்கல்விக்கான பாடத்திட்டங்களை வடிவமைக்கின்ற குழுக்கள், நீதிமன்ற நீதிபதிகள், ராணுவத்தின் உயர் அதிகாரிகள் என முக்கிய இடங்களில் இந்துதுவா ஆர்.எஸ்.எஸ். வெறியர்களைக் கொண்டு திட்டமிட்டு நிரப்பியது ஆர்.எஸ்.எஸ். கும்பல்.  தேசத்தின் கல்வி, கலாச்சார, நீதி நிர்வாக, அறிவுசார் துறைகளைக் கைப்பற்றுவதில் ஆர்.எஸ்.எஸ். கும்பல் வெற்றி பெற்றது.  அன்றைக்கு இது பற்றி தொடர்ந்து பேசிய இடதுசாரிகள், கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் ஆதரவுடன் இருந்த ஒரு ஆட்சியின் காலத்தில் (ஐக்கிய முற்போக்கு கூட்டணி-1) இது பற்றி எதுவுமே பேசவில்லை, இத்தகைய நபர்களைக் களையெடுக்க குரல் கொடுக்கவும் இல்லை, சிறிதளவு முயற்சியையும் கூட செய்யவில்லை என்பது கவலைக்குரிய விசயம்.  எனவே கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய ஆட்சியை நடத்தியது, இப்போதும் நடத்துவது ஆர்.எஸ்.எஸ். ஆட்கள்தான், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அல்ல என்று சொன்னால் தவறில்லை, உரக்கவே சொல்லலாம்.  நாம் வாய் மூடி மவுனமாக இருந்தால் எதிர்காலத்திலும் அவர்கள்தான் நடத்துவார்கள்.

 மாலேகாவ் குண்டு வெடிப்பையும், தமிழகத்தின் தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பையும் நடத்தியவர்கள் ஆர்.எஸ்.எஸ். பேர்வழிகளே என்று இப்போது தெரிகின்றது, பேசப்படுகின்றது.  ஆனால், காஷ்மீரில் போலி என்கவுன்டர்களை நடத்தி அப்பாவி 16, 17 வயது முஸ்லிம் பையன்களை சுட்டு வீழ்த்தி தங்களது பதவி உயர்வுக்கு வழி செய்து கொண்ட இந்துத்துவா ராணுவ அதிகாரிகளைப் பற்றி சில காலம் முன்பு செய்தி வந்தது.  ஆனால் இது பற்றி அதன் பின் எந்த விதமான தகவலும் இல்லை.  மாலேகாவ் குண்டுவெடிப்பைப் போலவே, தென்காசி குண்டுவெடிப்பைப் போலவே, இந்த போலி என்கவுன்டர் + பதவி உயர்வுது குறித்தும், இதுவரை நிகழ்த்தப்பட்ட ராணுவ, போலீஸ் துப்பாக்கிச்சூடுகள், என்கவுன்டர்களில் எங்கேயெல்லாம் முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டார்களோ அவை அனைத்தையும் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கேட்பதிலும் நியாயம் உள்ளது. 


இந்திய பயங்கரவாதத்தின் தொடக்கப்புள்ளி 1948 ஜனவரி 20 என்றால், நவீன கால உலகளாவிய பயங்கரவாதத்தை எங்கே இருந்து பேசத் தொடங்குவது?  

....தொடரும்.