பூவண்ணம் போல நெஞ்சம் பூபாளம்...
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
நலந்தானா நலந்தானா
வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கு ஏனோ அவசரம்
ஹிந்தியில் baharon phool barsao படம் சூரஜ்
Jane Kahan Gaye woh din, படம் mera naam joker
Dil ke jha rokhe mein, படம் பிரம்மச்சாரி
Mere Naina sawan badho, படம் mehbooba
இவை யாவும் சிவரஞ்சனி ராகத்தில் அமைந்த பாடல்கள்.
இந்த ராகம் பெரும்பாலும் சோக உணர்வை வெளிபடுத்த தக்க கனமான ஒரு ராகம் என்பது மேற்கண்ட பாடல்களை கேட்டாலே உணர முடியும்.
குறிப்பாக மேரா நாம் ஜோக்கர் படத்தின் ஜானே Kahan Gaye, பிரமசாரியில் Dil ke jharokhe mein... ஆகிய இரண்டு பாடல்களிலும் வயலின் இசை தூக்கலாக இருந்து பாடலின் உணர்வை இன்னும் ஆழத்துக்கு கொண்டு செல்கிறது.
...
இதில் ஒரு வேடிக்கையான விசயம் என்னவென்றால் ஐம்பது, அறுபதுகளில் ஹிந்தியில் இருந்து மெட்டுக்களை இங்கே இறக்குமதி செய்வார்கள்.
ஆனால் சூரஜ் படம் வந்தது 1966, மல்லிகா படம் வந்தது 1957. மல்லிகாவின் வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கு... மெட்டு அப்படியே baharon phool barsao பாடலில் ஒலிக்கும். தமிழில் டி ஆர் பாப்பா இசையமைத்து இருந்தார். ஹிந்தியில் சங்கர் ஜெய்கிஷன். தமிழில் அது காதலர் இருவர் சோக மழை பொழிந்து பாட, ஹிந்தியில் அது காதலியை காதலன் வர்ணிக்கும் பாடலாக உள்ளது. என்னவோ போங்க.
...
Mehbooba படத்தின் போஸ்டர் மதுரையில் நான் செல்லூரில் இருந்து ஷெனாய் நகர் மாநகராட்சி பள்ளிக்கூடம் போகும் வழியெங்கும் ஒட்டப் பட்டு இருக்கும். அது ஒரு நீண்ட சுவர். சினிமா போஸ்டர் ஒட்ட என்று நேர்ந்து விட்ட சுவர் போல இருக்கும்.
ராஜேஷ் கன்னா கிட்டார் மீட்டி mere Naina sawan badho என்று பாட ஹேமமாலினி தொலைவில் அய்யோ போச்சே...என...
இதே பாடலை அதிகாலை நேரம் சுபுஹ்ஹுக்கு பின்னே அண்ணல் நபிகள் வரும் போது என்ன செய்தாள் ஒரு மாது என்று நாகூர் ஹனிபா பாடி ஒரு கதை சொல்லி இருக்கிறார்.
...
அலோக் கட்டாரே என்று ஹிந்தியில் ஒரு மேடை பாடகர் இருக்கிறார். யூடியூப் பில் நண்பர்கள் பார்த்து இருக்க கூடும். இந்த குழுவில் ஒரு விசேஷம், பாடல்களை அப்படியே பாடிவிட்டு போக மாட்டார்கள். Improvise பண்ணுவார்கள். Mere Naina sawan badho பாடலுக்கு முன் சிவரஞ்சனி ராகத்தில் புல்லாங்குழல் lead இரண்டு நிமிடங்கள் தருவார் பாருங்கள்.
சரி, என்ன ஆச்சுன்னு கேக்குறீங்க. 1989இல் ஆவடியில் மாஸ்டர் சுரேந்திரன் என்பவரிடம் வயலின் கற்றுக்கொண்டேன், அதாவது எல் கே ஜி level. அவர் ஶ்ரீவில்லிபுத்தூர் காரர். தி நகர் அழைத்து சென்று எனக்கு வயலின் வாங்கி கொடுத்தார். அப்போது 650 ரூபாய். வைத்திருக்கிறேன்.
சரிகமபதநிச பாடச் சொன்னார். மாய மாளவ கௌள. பாடினேன், சாரீரம் நல்லா இருக்கேன்னார். ஒரே குஷி. தொடர்ந்து வகுப்புகளுக்கு போகவில்லை. தெலுங்கு கீர்த்தனைகள் மனதில் ஒட்டவில்லை. எனக்குள் இருந்த தமிழ் வாசகனும் எழுத்தாளனும் தள்ளி நின்று பார்த்தார்கள். நின்று விட்டேன்.
ஆவடி நேரு பஜாரில் இருந்த அந்த இசைப்பள்ளியும் இப்போது இல்லை. நடனம், வீணை, வாய்ப்பாட்டு என்று எல்லாமும் இருந்தது. நடனம் கற்று தர என்று மலையாளி ஒருவர் ஒவ்வொரு ஞாயிறும் கொச்சியில் இருந்து வந்தார் என்றால் பாருங்கள்.
...
வசந்தமாளிகையில் கலைமகள் கைப்பொருளே, குயில் பாட்டு வந்ததிங்கே ஆகியவையும் சிவரஞ்சனிதான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக