"துஷ்ட தேவதையே! துக்கிரியே! துஞ்சுபுலி இடறாதே!
துன்பக்கேணியில் நீந்தாதே! வெண்மணியில் சாம்பல் தயாரிக்கும்போது அரிதாரம்
பூசியவனுடன் பொறிபறக்க குளுமணாலியில் குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்த உனக்கு வரலாறு தெரியுமா?
ஜெனெரல் டயரின் துப்பாக்கியோடு தாதாபாய் நவ்ரோஜியின் தலையைப் பதம்பார்த்த எஸ்பி
சாண்டர்ஸின் குண்டாந்தடியும் என்னிடம்தான் உள்ளது என்ற உண்மையை மறைப்பது
கடுஞ்சூரியனை கைக்குட்டையால் மறைக்க முயலும் சிறுமதியீனர்களின் குறுஞ்செயல் அன்றோ!
அரசியல் அரைகுறையே! குத்தாட்ட ராணியே செல்லாது உன் போணியே! அடங்கு இல்லையேல் கண்மணிகள் அடக்குவார்கள்!" என்று
தமிழ்ச்சித்தர் தமுக்கொலியில் கட்டம்கட்டி
பதிலடி கொடுத்திருந்தார்.
தொடர்ந்து சிதம்பரம், வாச்சாத்தி, திண்ணியம், மேலவளவு, இடுவாய், பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, உத்தப்புரம், தர்மபுரி, பரமக்குடி போன்ற பல இடங்களிலும் தயாரிக்கப்பட்ட சாம்பலுக்கு சிமுக, அஇசிமுக இரண்டு கட்சிகளுமே போட்டிபோட்டு சொந்தம் கொண்டாடி அறிக்கை விட, கிளைவ்பேட்டையில் ராயப்பேட்டையும் தேனாம்பேட்டையும் சந்திக்கும் முட்டுச்சந்தில் சிமுக, அஇசிமுக கட்சியினர் நேருக்கு நேராக விவாதித்து அனல் பறக்க கருத்துப்பரிமாற்றம் செய்து கொண்டதில் அங்கே இருந்த கடைகள் வீடுகள் ஏகத்துக்கு சூடாகி தீப்பிடித்து எரிந்தன என்று மாலைபீரங்கி, மாலைடமாரம் போன்ற பத்திரிக்கைகள் படத்துடன் செய்தி வெளியிட்டன.
தொடர்ந்து சிதம்பரம், வாச்சாத்தி, திண்ணியம், மேலவளவு, இடுவாய், பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, உத்தப்புரம், தர்மபுரி, பரமக்குடி போன்ற பல இடங்களிலும் தயாரிக்கப்பட்ட சாம்பலுக்கு சிமுக, அஇசிமுக இரண்டு கட்சிகளுமே போட்டிபோட்டு சொந்தம் கொண்டாடி அறிக்கை விட, கிளைவ்பேட்டையில் ராயப்பேட்டையும் தேனாம்பேட்டையும் சந்திக்கும் முட்டுச்சந்தில் சிமுக, அஇசிமுக கட்சியினர் நேருக்கு நேராக விவாதித்து அனல் பறக்க கருத்துப்பரிமாற்றம் செய்து கொண்டதில் அங்கே இருந்த கடைகள் வீடுகள் ஏகத்துக்கு சூடாகி தீப்பிடித்து எரிந்தன என்று மாலைபீரங்கி, மாலைடமாரம் போன்ற பத்திரிக்கைகள் படத்துடன் செய்தி வெளியிட்டன.
சிமுக, அஇசிமுக சாம்பல் புயலில் எங்கே தனது கட்சி இருப்பது தெரியாமல் அடித்துக்கொண்டு
போகப்படுமோ என்று பயந்த கம்பவுண்டர் அய்யா பதட்டமடைந்து, "தேசியக்கட்சியும் ராஸ்ட்ரீயக்கட்சியும்
கடாரநாட்டுமக்களை ஏமாற்ற முடியாது! அவர்கள் என்ன இளிச்சவாயர்களா? நாங்க மட்டும் கடந்த காலத்தில் சொம்படிச்சிக்கிட்டா இருந்தோம்? எங்களால் இயன்ற அளவுக்கு மரங்களையும் காடுகளையும்
நடுரோட்டில் போட்டு நாங்கள் சாம்பல் தயாரித்ததை நாடு அத்தனை எளிதில் மறந்து விடுமா?
நாங்கள் உங்களோடு மத்தியபஞ்சாயத்தில் மருந்துமந்திரியாக
இருந்தபோது தடுப்பூசி மருந்து தொழிற்சாலைகளை எரித்து அதிலிருந்து சாம்பல் தயாரிக்கவில்லையா? சவால் விடுகிறேன், கடைசியாக தர்மபுரியில் தலித்துக்களின் வீடுகளையும்
சொத்துக்களையும் எரித்து நாங்கள் தயாரித்த சாம்பல்களை கப்பல் கொண்டு அள்ளினாலும்
எவனாலும் முடியாது!
அறிவுகெட்ட முண்டங்களே! எதில் வேண்டுமனாலும் பங்கு பிரிப்போம், தர்மபுரிசாம்பலை மட்டும் விட்டுக்கொடுக்க மாட்டோம்! சதிடில்லியில் தேசியக்கட்சி கையாண்ட அதே டெக்னிக்குகள், குஜராத்தில் ராஷ்ட்ரீயக்கட்சி கையாண்ட அதே டெக்னிக்குகள், கெமிக்கல் பவுடர்கள், கேஸ் சிலிண்டர்கள், பெட்ரோல்...என அதே சரக்குகளைத்தான் நாங்களும் தர்மபுரியில் பிரயோகப்படுத்தினோம்! அப்படியிருக்க நாங்கள் தயாரித்த சாம்பல் மட்டும் குறைந்துவிடுமா என்ன? ரெண்டு கட்சிகளும் நாகரிகத்தை கற்றுக்கொள்ள வேண்டும்! இந்த தேர்தலில் எங்கள் சாதியின் ஆதரவு இல்லாமல் யாரும் ஜெயிக்க முடியாது! தில் இருந்தா ஒண்டிக்கு ஒண்டி வா! விச ஊசி போட்டு காலி பண்ணிடுவேன்! முடியலியா, ரயில்தண்டவாளத்தில் படுக்க வெச்சிடுவேன்! ஜாக்கிரதை!" என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிக்கை விடுத்தார்.
அறிவுகெட்ட முண்டங்களே! எதில் வேண்டுமனாலும் பங்கு பிரிப்போம், தர்மபுரிசாம்பலை மட்டும் விட்டுக்கொடுக்க மாட்டோம்! சதிடில்லியில் தேசியக்கட்சி கையாண்ட அதே டெக்னிக்குகள், குஜராத்தில் ராஷ்ட்ரீயக்கட்சி கையாண்ட அதே டெக்னிக்குகள், கெமிக்கல் பவுடர்கள், கேஸ் சிலிண்டர்கள், பெட்ரோல்...என அதே சரக்குகளைத்தான் நாங்களும் தர்மபுரியில் பிரயோகப்படுத்தினோம்! அப்படியிருக்க நாங்கள் தயாரித்த சாம்பல் மட்டும் குறைந்துவிடுமா என்ன? ரெண்டு கட்சிகளும் நாகரிகத்தை கற்றுக்கொள்ள வேண்டும்! இந்த தேர்தலில் எங்கள் சாதியின் ஆதரவு இல்லாமல் யாரும் ஜெயிக்க முடியாது! தில் இருந்தா ஒண்டிக்கு ஒண்டி வா! விச ஊசி போட்டு காலி பண்ணிடுவேன்! முடியலியா, ரயில்தண்டவாளத்தில் படுக்க வெச்சிடுவேன்! ஜாக்கிரதை!" என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிக்கை விடுத்தார்.
கலர்கலரான துணிகளை உடலிலும் தலையிலும் அள்ளிப்போட்டுக்கொண்டு சின்னப்பிள்ளைகள் சூழ திடீரென்று தெருவில் வரும் குடுகுடுப்பைக்காரனைப்போல் தேர்தல் சமயங்களில் மட்டும் பிரசன்னமாகி எந்த ஜித்தனும் எதிர்பாராத புழுதிகளைக் கிளப்பி அரசியல் கட்சிகளுக்கு ரணஜன்னி விசஜுரமும், வாக்காளர்களுக்கு சிரிப்பும், அகில உலக அரசியலில் திரில்லும் வரவைக்கும் குணச்சித்திர கேரக்டரான ஜரிதா கட்சித்தலைவர் அப்புராணிஸ்வாமி எப்போதும் போல வடக்குமாசி வீதியில் ஒரு சந்தில் இருந்த இட்லிக்கடை முன் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். "தேசியக்கட்சி, தமிழ்ச்சித்தர் ரெண்டு பேருமே ஜனங்களை நன்னா ஏமாத்தறா. அவா ரெண்டு பேருமே ராஷ்ட்ரீயக்கட்சியோட சாம்பலை எங்கே பதுக்கி வச்சுருக்காங்கறது நேக்கு நன்னாத் தெரியும். அதுக்கான ப்ரூஃப், எவிடென்ஸ் எல்லாம் எங்கிட்டே ஒரு பாலிதீன் பேக்ல சேஃபா இருக்குது. இது பத்தி னைநா சபைக்கு ப்ராது கொடுக்க நாளைக்கு கார்த்தால மூணேகால் மணி ஃப்ளைட்ல பேரிக்கா போறேன். தேர்தலுக்கு முதநாள் ரெண்டாம் ஜாமத்துல இதுபத்துன எவிடென்ஸ் எல்லாம் பத்திரிக்கைகாராளுக்கு வெளியிடுவேன். அக்கார்டிங் டு இன்டர்னேஷனல் சாம்பல் சட்டம் செவன் ஹன்ட்ரெட் ஃபார்டி நைன், தீஸ் கல்ப்ரிட்ஸ்...."என்று அளித்த திகில் பேட்டி மாலைப்பத்திரிக்கைகளில் வருவது தெரிந்து கடாரநாட்டு மக்கள் கட்சி வேறுபாடின்றி கடைகளில் வரிசையில் நின்று, ஏஜெண்டுகள் பேப்பர் கட்டை சைக்கிளில் இருந்து இறக்கும் முன்னரே முண்டியடித்து வாங்கிப்படித்து விலாநோகச் சிரித்து கடுப்படிக்கும் தேர்தல் பிரச்சாரத்தை சற்றே மறந்து கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனார்கள். கட்சிவேறுபாடுகள் கடந்து எல்பிஜி மக்களை ஒற்றுமைப்படுத்தும் சக்தியுடைய ஒரே தலைவர் அப்புராணிஸ்வாமிதான் என ஒரு பத்திரிக்கை அப்பாவித்தனமாக செய்தி வெளியிட ‘திஸ் ஈஸ் ஹைலி மிஸ்ச்சீவஸ்! ஐயாம் அப்ரோச்சிங் ஹானரபிள் சுப்ரீம்கோர்ட்!’ என அவதூறு வழக்குப்போடப்போவதாக அப்புராணிஸ்வாமி அறிக்கை விட்டார்.
தொடரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக