இருக்கிற குழப்பம் போதாது என நடுவே ஒரு
திருப்பமாக சேதார் மக்கள் கட்சி என்றொரு புதிய கட்சி மத்திய பஞ்சாயத்து தேர்தலில்
திடீரெனக் குதித்தது. அதன் தலைவர் கந்தன்பச்சைக்கேணி மக்கள் முன் வைத்த தேர்தல்
அறிக்கையில் ஒரே ஒரு வரிதான் இருந்தது: ”எல்பிஜி தேசமக்கள் அனைவருக்கும் சேதார் கார்டு
வழங்கியது நானே; உயிர்வாழ்வதற்கு அடையாளமாகவும் அத்தியாவசியமானதும் ஆன சேதார்
கார்டு வாங்குவீர்! செழிப்பாக வாழ்வீர்! சேதார் வாழ்வின் ஆதார்! வாக்களிப்பீர்
சேதார் கார்டு சின்னத்துக்கு!”.
சேதார் கார்டு என்பது பேரிக்கா நாட்டின் பாதுகாப்புக் காரணங்களுக்காக
தேசியக்கட்சி ஆட்சியில் இருந்தபோது கொண்டுவந்த திட்டமாகும். சேதார் அட்டை
இருந்தால் மட்டுமே ஒருவர் உயிரோடு இருப்பதாக அரசு ஒத்துக்கொள்ளும்; அட்டை
இல்லாதவர்கள் தான் உயிரோடு இருப்பதாக உள்ளூர் சேதார் அதிகாரியிடம் தற்காலிக
சான்றிதழ் பெற்று கழுத்தில் தொங்கவிட்டுக்கொள்ள வேண்டும்; இந்த அட்டை இல்லாமல்
வீட்டை விட்டு வெளியே வர முடியாது; பொதுக்கழிப்பறை, பேருந்துநிலையம், ரேசன்கடை,
சமையல் எரிவாயு, பிரசவவார்டு, சுடுகாடு என அனைத்துப் பயன்பாடுகளுக்கும் சேதார்
அட்டையே ஆதாரம். பொதுக்கழிப்பிடங்களில் சேதார் இல்லாதவர்களுக்கு அனுமதி
மறுக்கப்பட்டதால் தேசம் நாறி நாற்றமெடுத்தது;
கணவன் மனைவி தாம்பத்திய உறவு கூட சேதார் அட்டை இருந்தால் மட்டுமே
அனுமதிக்கப்படும் என தேசியக்கட்சி அரசு கறாராக அறிவித்தது;
இதன்பொருட்டு நாட்டிலுள்ள அனைத்து வீடுகளிலும் படுக்கை அறை வாசலில் சேதார் பஞ்சிங் மெஷின் வைக்கப்பட்டு தலைநகரில் வரவுசெலவு மந்திரியின் கம்ப்யூட்டரோடு நேரடியாக இணைக்கப்பட்டது. சேதார் அட்டையை இதில் செருகி அனுமதி பெற்றாலன்றி படுக்கை அறையில் நுழைய முடியாது; இதன் காரணமாக சேதார் இல்லாதவர்கள் உயிரோடு திரியும் பிணங்களாக வெறுத்துப்போய் மூலையில் முடங்கிக்கிடந்தார்கள். சேதார் அட்டை உள்ளவர்களோ அட்டையை கழுத்தில் தொங்கப்போட்டுக்கொண்டு இல்லாதவர்களின் கண்ணில் படும்படி வேண்டுமென்றே நடமாடி வெறுப்பேத்தினார்கள்; சேதார் அட்டை காண்ட்ராக்ட் பேரிக்கா நாட்டின் ஹைபீம் கம்பெனிக்கு கொடுக்கப்பட்டது.
பேரிக்கா நாட்டின் ஜனாதிபதி, உலக வட்டிக்கடையின் தலைமை அதிகாரி ஆகியோரின் கம்ப்யூட்டரோடும் சேதார் அட்டை விவரங்கள் நேரடியாக இணைக்கப்பட்டன; உலகத்தில் எந்த மூலையிலும் பேரிக்கா நாட்டின் குடியுரிமை பெற்ற சொறிநாய் மீதும் கூட யாராவது கல்லை எறிந்தாலும் உடனடியாக பேரிக்கா ஜனாதிபதி சேதார் அட்டை பதிவுகளை நொடியில் பரிசோதித்து தன் நாட்டு நாயின் மீது கல்லை எறிந்தது யார் என்பதை இரண்டு நொடிகளில் கண்டுபிடித்து ஆளை அலேக்காக கறுப்புமாளிகைக்கு தூக்கி வந்துவிடுவார்.
இதன்பொருட்டு நாட்டிலுள்ள அனைத்து வீடுகளிலும் படுக்கை அறை வாசலில் சேதார் பஞ்சிங் மெஷின் வைக்கப்பட்டு தலைநகரில் வரவுசெலவு மந்திரியின் கம்ப்யூட்டரோடு நேரடியாக இணைக்கப்பட்டது. சேதார் அட்டையை இதில் செருகி அனுமதி பெற்றாலன்றி படுக்கை அறையில் நுழைய முடியாது; இதன் காரணமாக சேதார் இல்லாதவர்கள் உயிரோடு திரியும் பிணங்களாக வெறுத்துப்போய் மூலையில் முடங்கிக்கிடந்தார்கள். சேதார் அட்டை உள்ளவர்களோ அட்டையை கழுத்தில் தொங்கப்போட்டுக்கொண்டு இல்லாதவர்களின் கண்ணில் படும்படி வேண்டுமென்றே நடமாடி வெறுப்பேத்தினார்கள்; சேதார் அட்டை காண்ட்ராக்ட் பேரிக்கா நாட்டின் ஹைபீம் கம்பெனிக்கு கொடுக்கப்பட்டது.
பேரிக்கா நாட்டின் ஜனாதிபதி, உலக வட்டிக்கடையின் தலைமை அதிகாரி ஆகியோரின் கம்ப்யூட்டரோடும் சேதார் அட்டை விவரங்கள் நேரடியாக இணைக்கப்பட்டன; உலகத்தில் எந்த மூலையிலும் பேரிக்கா நாட்டின் குடியுரிமை பெற்ற சொறிநாய் மீதும் கூட யாராவது கல்லை எறிந்தாலும் உடனடியாக பேரிக்கா ஜனாதிபதி சேதார் அட்டை பதிவுகளை நொடியில் பரிசோதித்து தன் நாட்டு நாயின் மீது கல்லை எறிந்தது யார் என்பதை இரண்டு நொடிகளில் கண்டுபிடித்து ஆளை அலேக்காக கறுப்புமாளிகைக்கு தூக்கி வந்துவிடுவார்.
வெறும் அட்டை கொடுத்த ஒரு நபரே மத்திய பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட
முடியும் எனில் நாம் என்ன இளிச்சவாயர்களா என கொந்தளித்தார்கள் ரேசன் கடை
ஊழியர்கள்; அட்டையை விடவும் பெரியவிசயமான
அரிசி கோதுமை சீனி மண்ணெண்ணெய், வெள்ள காலங்களில் அரிசி பணம் வேட்டி சேலை
என அனைத்தும் வழங்கும் நாம் 555 தொகுதிகளிலும் தராசு சின்னத்தில் போட்டியிடுவோம்
என ரேசன் ஊழியர்கள் சம்மேளன மாநாட்டில் தீர்மானம்போட்டு வேட்புமனுவும்
தாக்கல்செய்தார்கள்; ரேசன் ஊழியர்களே மக்களுடன் நேரடித்தொடர்பு உள்ளவர்கள்
என்பதால் இப்புதிய திருப்பம் தேசியக்கட்சிக்கும் ராஷ்ட்ரீயக்கட்சிக்கும் பெரும்
அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியது.
வாகனச்சோதனையில் ஆயிரம் பர்கானாவுக்கு அதிகமாக கணக்கின்றி கொண்டு
செல்பவர்களின் பணத்தை தேர்தல் கங்காணிகள் கைப்பற்றினார்கள்; இதனால் கல்யாணம்
காதுகுத்து பூப்புனிதநீராட்டு இறுதிச்சடங்கு பள்ளிக்கூட கட்டணம் மருத்துவமனை செலவு
போன்றவற்றுக்கு வட்டிக்கு பணம் வாங்கும் எல்பிஜி மக்கள் பெரும் சிரமத்துக்கு
உள்ளானார்கள்; வட்டிக்காரர்களில் பெரும்பாலோர் சிமுக அஇசிமுக கம்பவுண்டர் கட்சி
தேசியக்கட்சி ராஷ்ட்ரீயக்கட்சி அந்தர் ராஷ்ட்ரீயக்கட்சி போன்ற பெருந்தலைகள்
என்பதால் தமது பிசினஸ் பாதிக்கப்படுவதை உணர்ந்து தேர்தல் கங்காணியம் அத்துமீறி
செயல்பட்டு சாமான்யமக்கள் வயிற்றில் அடிப்பதாக ஒற்றுமையாக குற்றம் சாட்டினார்கள்.
‘சட்டம் எல்லாருக்கும் ஒன்றுதான்’ என கங்காணியம் அடித்துச்சொல்லிவிட்டது. இதற்கு மறுநாள் நடந்த வாகனச்சோதனைகளில்
பிடிபட்ட கரன்சிகள் எல்லாம் பேரிக்கா டாலர்களாக இருப்பதுகண்டு கங்காணிகள்
குழப்பமும் வியப்பும் அடைந்தார்கள். ‘பர்கானாவுக்குத்தான் தடையே தவிர டாலருக்கு
இல்லை’ என தேசியக்கட்சி ராஷ்ட்ரீயக்கட்சி உள்ளிட்ட அனைத்துக்
கட்சிகளும் ஒற்றுமையாக பத்திரிக்கையாளர்களைக் கூட்டிவைத்து கொக்கரித்தபின்னர் என்ன
செய்வதென்று தெரியாமல் கங்காணிகள் கையைப்பிசைந்து கொண்டிருப்பதாக சற்றுமுன்
கிடைத்த தகவல் கூறுகின்றது.
தேர்தல் நாள் நெருங்க
நெருங்க இளவரசரின் சிக்கன எளிய வாழ்க்கை மேலும் தீவிரம் அடைய, மீண்டும் நள்ளிரவில் டிவியில் பிரமாதராய் கையில் கால்குலேட்டர், லேப்டாப், காப்பி ஃப்ளாஸ்க் சகிதம் தோன்றி சற்றுமுன் நடத்திய கருத்துக்கணிப்பின்படி ராஷ்ட்ரீயக்கட்சிக்கு 0.0001 சதவீத வாக்கு மட்டுமே கிடைக்கும் என்றும், தேசியக்கட்சிக்கு 95.99 சதவீத வாக்கு கிடைப்பது உறுதி என்றும், மீதி எல்லாம் கள்ள ஓட்டு என்றும்
குர்தாவைப்போட்டுத் தாண்டி சத்தியம் செய்தார்.
தொடரும்...