1) ஆம், லிபியாவின் அதிபர் கடாஃபி அமெரிக்க-NATO கூட்டு கொலைகாரப் படைகளால் கொல்லப்பட்டுவிட்டார். இதற்கு முன் இராக் அதிபர் சதாம்ஹுசேன். பெட்ரோலிய எண்ணெய் வளம் நிறைந்த அரபு மண்ணில் தனது ஆக்கிரமிப்பை வலுப்படுத்த அங்குள்ள நாடுகளில் ஜனநாயகம் இல்லை என்று கூக்குரல் எழுப்புவதும், தனது கைக்கூலிகளை வளர்த்து உள்ளுரில் ’மக்கள் கிளர்ச்சி’யை கிளப்புவதும் அமெரிக்க ‘ஜனநாயகம்’. அரபு பிராந்தியத்தில் உள்ள எண்ணெய் வளத்தை தன் கூட்டாளி நாடுகளில் ஸ்டாக் செய்யும் பொருட்டு பைப் லைன் போடும் திட்டத்தை அமல் படுத்த இராக்கில் நுழைந்து சதாமைக் கொன்றார்கள், ஆஃப்கானிஸ்தானில் நுழைந்து ‘வழியை’ க்ளீயர் செய்தார்கள். இப்போது லிபியா. அடுத்தது இரானும் சிரியாவும். கடாஃபியின் சொந்த ஊரான சிர்தேயில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகவே ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் இறங்கிய அமெரிக்க-NATO கூட்டு கொலைகாரப் படைகள், அனேகமாக அந்த நகரத்தின் ஒவ்வொரு கட்டிடத்தையும் தரைமட்டமாக்கி விட்டது, குண்டுவீச்சில் செத்த சாமானிய லிபிய மக்களின் எண்ணிக்கைக்கு கணக்கே இல்லை, விளைவு மரணம், தொற்று நோய், உணவு, தண்ணீர், மருந்து தட்டுப்பாடு...
2) சரித்திரத்தில் சர்வாதிகாரிகளின் சாவு இப்படித்தான் எனில், உலகமக்களின் விரோதிகளான அமெரிக்க அதிபர்களின் முடிவும் அமெரிக ஏகாதிபத்தியத்தின் மரணமும் இப்படித்தான் இருக்கும். ஆனால் ஒரு வித்தியாசம் - கடல் கடந்து ஏதோ ஒரு நாட்டின் அல்லது நாடுகளின் கூட்டுப்படைகளால் அந்த மரணங்கள் நிகழ்த்தப்படாது, மாறாக சாமானிய அமெரிக்க உழைக்கும் மக்கள் - வெள்ளையினர், கறுப்பினர், கலப்பினர் என்ற வேறுபாடின்றி - ஒன்று திரண்டு, உலகமக்களுக்கு எதிராக உலக முதலாளிகளும் ஏகாதிபத்திய ஏவல் நாய்களும் கூடிக்குலாவுகின்ற தலைமையிடமான வெள்ளைமாளிகையிலேயே அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு சமாதி கட்டுவார்கள். அதற்கு கட்டியம் கூறுபவைதான் Wall street-ல் இன்று பறக்கின்ற பதாகைகளும் அதன் தொடர்ச்சியாக 82 நாடுகளில் இன்று பல்வேறு மொழிகளில் வீதிகளில் ஒலிக்கின்ற சாமானிய உழைக்கும் மக்கள் முழங்குகின்ற ‘வால்வீதியை ஆக்கிரமிப்போம்! உண்மையான ஜனநாயகம் வேண்டும்!’ கோசங்கள்!
3)அரபு நாடுகளான துனீசியாவில், எகிப்தில், லிபியாவில், பஹ்ரீய்னில் மக்கள் வீதிகளில் திரண்டபோது கிரிக்கெட்டுக்கு சமமாக live relay ஒளிபரப்பிய ‘நடுனிலை’ பத்திரிகை, டிவி ஊடகங்கள், Wall Street விசயத்தில் எருமை மாட்டின் மேல் மழை பேய்ஞ்ச கணக்கில் சுரணை அற்று இருப்பதன் மர்மம்தான் என்ன?
2) சரித்திரத்தில் சர்வாதிகாரிகளின் சாவு இப்படித்தான் எனில், உலகமக்களின் விரோதிகளான அமெரிக்க அதிபர்களின் முடிவும் அமெரிக ஏகாதிபத்தியத்தின் மரணமும் இப்படித்தான் இருக்கும். ஆனால் ஒரு வித்தியாசம் - கடல் கடந்து ஏதோ ஒரு நாட்டின் அல்லது நாடுகளின் கூட்டுப்படைகளால் அந்த மரணங்கள் நிகழ்த்தப்படாது, மாறாக சாமானிய அமெரிக்க உழைக்கும் மக்கள் - வெள்ளையினர், கறுப்பினர், கலப்பினர் என்ற வேறுபாடின்றி - ஒன்று திரண்டு, உலகமக்களுக்கு எதிராக உலக முதலாளிகளும் ஏகாதிபத்திய ஏவல் நாய்களும் கூடிக்குலாவுகின்ற தலைமையிடமான வெள்ளைமாளிகையிலேயே அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு சமாதி கட்டுவார்கள். அதற்கு கட்டியம் கூறுபவைதான் Wall street-ல் இன்று பறக்கின்ற பதாகைகளும் அதன் தொடர்ச்சியாக 82 நாடுகளில் இன்று பல்வேறு மொழிகளில் வீதிகளில் ஒலிக்கின்ற சாமானிய உழைக்கும் மக்கள் முழங்குகின்ற ‘வால்வீதியை ஆக்கிரமிப்போம்! உண்மையான ஜனநாயகம் வேண்டும்!’ கோசங்கள்!
3)அரபு நாடுகளான துனீசியாவில், எகிப்தில், லிபியாவில், பஹ்ரீய்னில் மக்கள் வீதிகளில் திரண்டபோது கிரிக்கெட்டுக்கு சமமாக live relay ஒளிபரப்பிய ‘நடுனிலை’ பத்திரிகை, டிவி ஊடகங்கள், Wall Street விசயத்தில் எருமை மாட்டின் மேல் மழை பேய்ஞ்ச கணக்கில் சுரணை அற்று இருப்பதன் மர்மம்தான் என்ன?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக