திங்கள், அக்டோபர் 24, 2011



நாற்பத்துநான்காவது ரட்சகனும் நோபல் அமைதிப்பரிசும்- 


பாகம் 1

(உலக முதலாளி ஒபாமா நோபல் பரிசை ‘வாங்கிய’போது எழுதியது)




   (1)  இரவும் பனிமூட்டமும்

அலேய்ன் ரெஸ்னேய் (Alain Resnais) இயக்கிய "இரவும் பனிமூட்டமும்" (Night and Fog) (1955) என்ற  திரைப்படம் சர்வாதிகாரி ஹிட்லரின் சித்ரவதை முகாம்களில் என்ன நடந்தது என்பதை சொல்கின்றது.  இரண்டாம் உலகப்போர் முடிந்து பத்து வருடங்களுக்குப் பின் வெளியானது.   35 நிமிடமே ஓடும் இப்படம் 55 வருடங்களுக்குப் பிறகும் காண்போரை அதிர்ச்சியில் உறையச் செய்கின்றது.  ழான் கேரோல் (Jean Cayrol - 1911-2005) என்ற ஃப்ரென்ச் கவிஞர், 1941இல் ஃப்ரான்சை ஜெர்மனி ஆக்கிரமித்தபோது பிடிக்கப்பட்டு நாஜி ஹிட்லரின் சித்ரவதை முகாமில் அடைக்கப்பட்டார்.  அங்கே அடைக்கப்பட்ட அனைவருக்கும் மரணம் உறுதியானது.  டாக்டர் ஜோஹான் க்ருபர் (Johaan Gruber) என்ற கிறித்துவ பாதிரியாரின் கருணையினால் கேரோல் உயிருடன் தப்பினார்.  சித்ரவதை முகாமில் தனது அனுபவங்களை அவர் பின்னர் எழுதினார்.  அதுவே திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.  "இரவும் பனிமூட்டமும்" என்பது 1941 டிசம்பர் 7 அன்று ஹிட்லர் வெளியிட்ட ரகசிய ஆணை ஆகும்.  தனது எதிரிகளை இருந்த சுவடு தெரியாமல் ஒழித்துக்கட்ட ஹிட்லர் இட்ட ஆணைதான் இது.

வெறும் சித்ரவதைகள் அல்ல இவை.  மனிதர்களை சோதனை எலிகளாகப் பயன்படுத்தி ஹிட்லரின் சித்ரவதை முகாம்களில் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு கொடூரங்கள் நடந்ததாக இப்போதும் செய்திகளைப் படிக்கின்றோம்.  மனிதனின் மூச்சை நிறுத்தி விடுவது, விசவாயு செலுத்துவது, நோயுற்றவர்கள், உடல் ஊனமுற்றவர்களை கொன்று விடுவது,  உயிரோடு மனிதனை அறுத்தும் உடல்பாகங்களையும் தலையையும் வெட்டி இதயத்துடிப்பையும் பிற உடல் இயக்கங்களையும் பார்ப்பது, விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் உடலுறவு, விலங்குகளின் ரத்தத்தை மனிதர்களுக்கு செலுத்துவது... என ஹிட்லரின் சித்ரவதைகள் பக்கம்பக்கமாக எழுதப்படுகின்றன.  மனிதசமூகம் கற்பனையும் செய்ய முடியாத பல கொடுமைகள் நடந்தன என்பதை 'நியூரெம்பெர்க் விசாரணைகள்' (Nuremberg Trials) வெளிச்சமாக்கின.

                                 (2)    இருட்டுச்சிறைகள் - அமெரிக்க ஸ்டைல்

"பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்"தில்  கைது செய்யப்பட்ட பதினான்கு "அதிமுக்கிய" கைதிகளை க்யூபாவின் எல்லைக்குள் அமைந்துள்ள க்வான்டனாமோ வளைகுடாவில் அமெரிக்கா அடைத்துவைத்து, அவர்கள் மீது "திட்டமிட்ட" வகையிலான கொடூர சித்ரவதைகளை ஏவியதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், தொடர்பான கைதிகளிடம் நடத்திய நேர்காணல் மூலம் அம்பலப்படுத்தியுள்ளது.  ஜார்ஜ் புஷ் நிர்வாகத்தின் நேரடி உத்தரவின் அடிப்படையிலேயே, அமெரிக்க  ராணுவமும் உளவு நிறுவனங்களும் இந்த சித்ரவதைகளை நடத்தியுள்ளன.  இந்த நேர்காணல் விவரங்களை "அதிமுக்கிய"அரசு அதிகாரிகளுக்கு  மட்டுமே தெரிவிப்போம் என்றும் செஞ்சிலுவைச்சங்கம் ஒத்துக்கொண்டதாம் (தகவல்:www.wsws.org, 17.3.2009).

"ஜனநாயகத்தின் காவலன்" ஆன அமெரிக்க அரசின் ராணுவமும், அதன் பயங்கரவாத அமைப்பான சி.ஐ.ஏ.வும் இதுபோன்ற "இருட்டுச்சிறை" என்ற பல ரகசிய சித்ரவதை முகாம்களை உலகம் முழுவதும் (க்வான்டனாமோ, போலந்து, ருமேனியா, தாய்லாந்து, மொராக்கோ, ஆஃப்கானிஷ்தானிலுள்ள பாக்ராம் விமானதளம், இந்தியப்பெருங்கடலில் உள்ள டீகோகார்சியா தீவு போன்ற பல நாடுகள்) கட்டி மனிதர்களை உயிரோடு கொல்லும் வேலையை செய்துகொண்டிருக்கின்றன.  2004ஆம் ஆண்டு கணக்குப்படி இராக்கில் உள்ள அமெரிக்க 'இருட்டுச்சிறை'களில் மட்டும் 18,000 கைதிகளும், உலகம் மொத்தமும் 25,000 கைதிகளும் இருந்தார்களாம்.  வாழ்க அமெரிக்க  ஜனநாயகம்! வளர்க பயங்கரவாத்த்துக்கு எதிரான போர்!.

பத்திரிக்கையாளரான மார்க் டானெர் (Mark Danner), செஞ்சிலுவைச்சங்கத்தின் நேர்காணல் விவரங்களை, "அமெரிக்க சித்ரவதை: இருட்டுச்சிறைகளிலிருந்து எழும்பும் குரல்கள்" (US Torture: Voices from the Black Sites) என்ற தனது நூலில் எழுதியுள்ளார்.  தனக்கு இந்த விவரங்கள் எங்கிருந்து கிடைத்தன என்பது பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை.

ஜெனீவா உடன்பாட்டின் மூன்றாவது பிரிவு போர்க்கைதிகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்று பேசுகின்றது.  ஜெனீவா உடன்பாட்டில் வரையறுக்கப்பட்டுள்ள 'போர்க்கைதிகளை நடத்த வேண்டிய முறைகளை உலகநாடுகள் பின்பற்றுகின்றனவா என்பதை சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் கண்காணிக்கின்றது.  இந்த வரையறைகளுக்குப் பொருந்தாத வகையில், க்வான்டனாமோ வளைகுடாவில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், 'சித்ரவதை, மனிதாபிமானம் இன்மை, இழிவான நடத்தை' போன்ற கொடுமைகளுக்கு உட்படுத்தப்படுவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் குறிப்பிடுகின்றது.    ஐ.நா.சபையே அமெரிக்க அதிபர்களின் 'நட்சத்திர அந்தஸ்து பெற்ற கக்கூஸ்' ஆகி ஆண்டுகள் பலவாகிவிட்ட நிலையில் செஞ்சிலுவைச்சங்கம் மட்டும் என்ன செய்துவிட முடியும் என்பது புரியவில்லை.

அமெரிக்கா பிரச்சாரம் செய்கின்ற 'பயங்கவாதத்துக்கு எதிரான யுத்தம்' என்பது உண்மையில் யாருக்கு எதிரானது என்பதை செஞ்சிலுவைச்சங்கத்தின் அறிக்கை வெளிச்சமாக்குகின்றது.  தனியே அடைப்பது, அடிப்பது, நிர்வாணமாக்குவது, பல்வேறு பாலியல் தொந்தரவுகள், உடலை முறுக்கியும் வளைத்தும் பலமணி நேரம் வைப்பது, அதிகபட்ச வெப்பநிலையில் அடைப்பது, தண்ணீருக்குள் மூழ்க வைப்பது, தூங்கினால் அடிப்பது என்பவை மனிதகுலத்துக்கு அமெரிக்கா அன்போடு வழங்கியுள்ள கண்டுபிடிப்புக்களில் சில. 

"க்வான்டனாமோ வளைகுடாவுக்கு கொண்டுவரப்படும் முன்னும் பின்னும் கூட இந்த பதினான்கு கைதிகளும் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால், அவர்களது வாக்குமூலத்தை நம்பவேண்டியுள்ளது, ஏனெனில் இவர்கள் ஒருவருக்கொருவர் பேசி பொய் சொல்லியிருக்க முடியாது என்பதை நாங்கள் குறிப்பிட விரும்புகின்றோம்" என்று செ.சங்கம் குறிப்பிடுகின்றது.

14 பேர்களில் 9 பேர் பாகிஸ்தானில் பிடிக்கப்பட்டவர்கள். அமொ¢க்க ராணுவமும் உளவுத்துறை கொடூரர்களும் இவர்களை எவ்வாறு வைத்திருந்தார்கள்?  உடல் முழுக்கப்போர்த்திவிடுவது, கறுப்புகண்ணாடியைப் போட்டுவிடுவது, தலையை சாக்கு கொண்டு மூடுவது, காதுகளை அடைத்து விடுவது, கையையும் காலையும் சேர்த்து சங்கிலியால் கட்டி விடுவது - இப்படி, அவர்களை அசைய விடாமல் செய்வது, தாங்கள் எங்கி இருக்கின்றோம், எங்கு போகின்றோம் என்பதை உணர விடாத அளவுக்கு அவர்களது புலன் உணர்வுகளை மழுங்கடிப்பது - இந்தக் கைதிகளை பல இடங்களுக்கும் கொண்டு சென்றபோது இப்படித்தான் அவர்களை நடத்தினார்களாம்.  செல் என்ற எலிப்பொறி போன்ற குறுகிய "அறை"களில் கைதிகளை அடைப்பார்கள்.

ஏமன் நாட்டு கைதியான வாலித் பின் அட்டாஸ் தான் அடைக்கப்பட்டிருந்த  செல்லின் அளவு, ஆறரை அடி நீளமும், மூன்றரை அடி அகலமும்தான் என்று சொல்கின்றார்.  உயிரோடு மனிதர்களைக் கொல்லும் சவக்குழி!  "விசாரணை என்ற பெயா¢ல், முதல் இரண்டு வாரங்களில் தினமும் என்னை முகத்தில் அடித்தார்கள், உடலெங்கும் குத்தினார்கள்.  கழுத்தில் ஒரு வளையத்தை மாட்டுவார்கள், அதைப் பிடித்துக்கொண்டு சுவா¢ல் ஓங்கி மோதுவார்கள்.  தரையில் ஒரு ப்ளாஸ்டிக் விரிப்பில் படுக்கவைத்து அதை ஓரங்களில் மேல்நோக்கி தூக்குவார்கள், பின்னர் வாளிகளில் குளிர்ந்த நீர் எடுத்து என் மேல் ஊற்றுவார்கள்... இதெல்லாம் தினமும் நடக்கும்".  இவரை நிர்வாணப்படுத்தி, கைகளில் விலங்கிட்டு தலைக்கு மேல் தூக்கி செல்லின் கூரையோடு சேர்த்துக் கட்டினார்கள்.  இரண்டு வாரங்கள் இவர் இந்த நிலையில் நின்றபடியே இருந்தார். 

தொடர்ந்து பல வாரங்களுக்கு திடவுணவு தரப்படமாட்டாது.    என்ஸ்யூர் (Ensure) என்று சொல்லப்படும் திரவ வைட்டமின் மட்டும் கொடுப்பார்கள். "முதல் இரண்டு வாரங்களுக்கு எனக்கு உணவு எதுவும் தரவில்லை.  என்ஸ்யூரும், தண்ணீரும் மட்டுமே கொடுத்தார்கள்". 

நிர்வாணப்படுத்தி, கைகளில் விலங்கிட்டு தலைக்கு மேல் தூக்கி செல்லின் கூரையோடு சேர்த்துக் கட்டுவது, குளிர் வாட்டும் இரவு பகல் எந்நேரமும் இப்படியே நிற்க வேண்டும் - அனேகமாக எல்லாக் கைதிகளுக்கும் இந்த விதமான தண்டனை உண்டு.

காலித் ஷேக் முகம்மது என்ற கைதி, "விசாரணை என்ற பெயா¢ல் குளிர்ந்த நீரை நாற்பது நிமிடங்கள் தொடர்ந்து என் மேல் வாரி  இறைப்பார்கள்" என்று சொல்கின்றார்.

கைதிகளை "ஒலி"ச்சித்ரவதைக்கும் உட்படுத்தினார்கள்.  பாலஷ்தீனிய பின்னணியுடைய அபு சுபயதா என்ற கைதியின் வாக்குமூலம்: "என்னை நாற்காலியோடு விலங்கிட்டு கட்டி அனேகமாக மூன்று வாரங்கள் உட்கார வைத்திருந்தார்கள்.  தொடர்ந்து இப்படியே இருந்ததால் காலின் கீழ்ப்புறம் கொப்புளங்கள் தோன்றின.  கழிப்பறைக்கு செல்ல மட்டுமே நான் அனுமதிக்கப் பட்டேன்.  மிக பயங்கர சத்தத்துடன் பாட்டை ஒலிக்கச் செய்வார்கள்.  ஒரு நாள் முழுக்கவும் இப்படி செய்வது வழக்கம்.  அதிக ஒளியும் வெப்பமும் வீசும் மின்விளக்குகளைப் பொருத்துவார்கள்.  இல்லையேல் இருட்டில் அடைப்பார்கள்.  தொடர்ந்து பல நாட்களுக்கு தூங்க விட மாட்டார்கள்.  அனேகமாக முதல் மூன்று வாரங்களுக்கு என்னை தூங்க அனுமதிக்கவில்லை.  நான் தூங்கி விழுந்தால் முகத்தில் தண்ணீர் அடிப்பார்கள்" என்கின்றார் சுபயதா. 

"அமெரிக்க ஸ்டைல் சித்ரவதை"களில் மிகக் கொடூரமானது கைதிகளின் உணர்வுகளைப் புண்படுத்தி அவமானப்படுத்துவது.  சிறை வாழ்வின் பெரும்பகுதி கைதிகள் நிர்வாணமாகத்தான் இருக்கின்றார்கள்.  சி.ஐ.ஏ. கொடூரர்களுடன் "ஒத்துழைத்தால்" உடை அணியலாம், கழிப்பறைக் காகிதம் கூடக் கிடைக்கும்.  "ஒத்துழைப்பு" சா¢யில்லை என்றால் இந்த சலுகைகள் பறிக்கப்படும். 

(3)    "தண்ணீர் சிகிச்சை"

"தண்ணீர் சிகிச்சை" என்பது மிக முக்கியமான சித்ரவதை.  அனேகமாக எல்லாக்கைதிகளும் இதை அனுபவித்துள்ளார்கள்.

சவூதி அரேபியாவைச் சேர்ந்த அப்துல் ரஹீம் ஹுசேன் அப்துல் நஷீ¡¢ என்ற கைதி தனது "தண்ணீர் சிகிச்சை" அனுபவத்தைக் கூறுகின்றார்: "இதற்காகவே ஒரு படுக்கை வடிவமைக்கப் பட்டிருந்தது.  அத்தோடு சேர்த்து என்னைக் கட்டுவார்கள்.  பின்பு அதை நட்டமாக நிறுத்துவார்கள்.  முகத்தில் துணியால் மூடி குளிர்நீரை முகத்தில் அடிப்பார்கள்.  தொடர்ந்து ஒரு மணி நேரம் 'சிகிச்சை' தொடரும்.  என்னால் சுவாசிக்க முடியாது என்பதால் நான் பயந்து துடிப்பேன், அலறுவேன்... அப்போது  எனது கை கால்களில் காயங்கள் ஏற்படும்.  அப்போது அங்கே ஒரு டாக்டர் இருப்பார்.  எனது இதயத்துடிப்பு, ஆக்சிஜன் போன்றவற்றை அளவிடவே அங்கே அவர் இருந்ததாக நான் நினைக்கின்றேன்.  எந்த அளவுக்கு நான் தாக்குப்பிடிக்க முடியும் என்று சோதனை செய்தார்கள்".  

"தண்ணீர் சிகிச்சை" முறை 2003ஆம் ஆண்டோடு முடிவுக்கு வந்ததாக ஜார்ஜ் புஷ் நிர்வாகம் ஒப்புக்கொண்டது.   

இதுபோன்ற சித்ரவதை திட்டங்கள் ஜார்ஜ் புஷ் நிர்வாகத்தின் உயர் மட்டத்தில் தீட்டப்பட்டதாகவும், அந்த உயர்மட்டத்தில் சி.ஐ.ஏ.பயங்கரவாதிகள், ராணுவம், மருத்துவர்கள், மனநலமருத்துவர்கள் போன்றோர் இருந்ததாகவும் செ.சங்க அறிகையிலிருந்து தொ¢கின்றது. 

ஒவ்வொரு சித்ரவதை முறையும் 'எங்கோ' இருந்த அதிகாரிகளுக்குத் தொ¢விக்கப்பட்ட பின்னர்தான் கடைப்பிடிக்கப் பட்டதாக டானெர் கூறுகின்றார்.  அதாவது ஜார்ஜ் புஷ்ஷுக்கு தொ¢ந்தேதான் இந்த சித்ரவதைகள் நடத்தப்பட்டன.  பயங்கரவாத அமைப்பான சி.ஐ.ஏ.வின் விசாரணை அதிகாரி ஜான் கிரியாகூ (John Kiriakou), அமெரிக்க ஒலிபரப்பு நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் கூறினார்: "கைதிகளை விசாரணை நடத்துபவர் தனது இஷ்டத்துக்கு சித்ரவதைகளை செய்ய முடியாது.  ஒவ்வொரு சித்ரவதையை செய்யும் முன்னாலும் செயல்வடிவத்துக்கான டெபுடி டைரக்டா¢டம் அனுமதி பெற வேண்டும்.  'ஒத்துழைக்க மறுக்கின்றான், நான் அவனை '.........' செய்யப்போகின்றேன், அனுமதி வேண்டும்' என்று கேட்க வேண்டும், அனுமதி வரும்."

சுபயதாவின் சித்ரவதைகளுக்கு அனுமதி கொடுத்தது, அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் முதன்மைக்கமிட்டி.  இந்தக் கமிட்டியில் இருந்த பயங்கரவாதிகள் யார்? அன்றைய துணை ஜனாதிபதி டிக் செனே, அன்றைய பாதுகாப்பு ஆலோசகர் காண்டொலிசா ரைஸ், அட்டர்னி ஜெனெரல் ஜான் ஆஷ்க்ராஃப்ட்.  அதன் பின் சி.ஐ.ஏ.வின் இயக்குநர் ஜார்ஜ் டெனெட் நேரடியாகவே 'மிக உயர்ந்தவர்களின்' அனுமதியைப் பெற்று குறிப்பிட்ட சில கைதிகளுக்கு தரப்பட வேண்டிய சித்ரவதைகளுக்கு அனுமதி வாங்கினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் துணை அமைப்பான செஞ்சிலுவைச்சங்கமே இந்த அறிக்கையை அளித்துள்ளதால் இது உண்மையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.  அதாவது ஜெனீவா உடன்படிக்கையில் எழுதப்பட்டுள்ள 'போர்க்கைதிகளை நடத்த வேண்டிய முறை, அவர்களுக்கான உ¡¢மைகள்' போன்றவற்றை ஜார்ஜ் புஷ் நிர்வாகம் தொ¢ந்தே மீறியுள்ளது என்பது தெளிவு.

மேலும் இது 14 கைதிகள் மட்டுமே தொடர்பான பிரச்னையும் அல்ல.  உலகம் முழுக்க வெளியே தொ¢ந்தும் தொ¢யாமலும் 'இருட்டுச்சிறைகளை' வைத்திருக்கின்ற அமொ¢க்க பயங்கரவாதிகளிடம் எத்தனை ஆயிரம் அப்பாவிகள் சிக்கி சீரழிகின்றார்கள் என்பது யாருக்கும் தொ¢யாது.

                                                 -2-

             ஹிட்லரும் அமெரிக்க ஜனநாயகமும்....

இவை அல்லாமல், 2001 செப்.11 தாக்குதலுக்குப் பின், அமொ¢க்கா பல நாடுகளில் இருந்து தான் சந்தேகப்படுகின்ற இளைஞர்கள் பலரை இரவோடு இரவாகக் கடத்தியுள்ளது, பலரைக் கொலை செய்துள்ளது.  குறிப்பாக ஆப்பிரிக்கா,  மத்திய ஆசியா, பால்கன், இந்தோனேசியா, பாகிஸ்தான், யூகோஸ்லேவியா, எகிப்து, போஸ்னியாஅஜர்பைஜான், அல்பேனியா, நைஜீ¡¢யா, ஃபிலிப்பைன்ஸ், கென்யா போன்ற நாடுகளில் இருந்து கடத்தப்பட்ட பல இளைஞர்கள் அமொ¢க்காவுக்கோ அல்லது அதன் சார்பு நாடுகளுக்கோ ரகசியமாக கடத்தப்பட்டார்கள், பலர் கொலை செய்யப்பட்டார்கள்.  ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு செல்ல கடைப்பிடிக்கப்படும் பாஸ்போர்ட், விசா போன்ற எந்த நடைமுறையும் இந்தக் கடத்தல் விசயத்தில் கடைப்பிடிக்கப்பட்டதில்லை ((தகவல்:www.wsws.org, 20.3.2002). 

தொடக்கத்தில் குறிப்பிட்ட "இரவும் பனிமூட்டமும்" என்ற ஹிட்லா¢ன் ஆணைக்கும் ஜார்ஜ் புஷ் என்ற பயங்கரவாதி செய்ததற்கும் என்ன வித்தியாசம்?

இவை அல்லாமல், இராக் நாட்டின் அபு-க்ரேய்ப் சிறையில் இராக் மக்கள் மீது, குறிப்பாக சிறு பையன்கள், இளைஞர்கள், பெண்கள் மீது அமொ¢க்க பயங்கரவாதிகள் நடத்திய கொடுமைகள், 2004ஆம் ஆண்டு புகைப்படமாக, வீடியோவாக வெளிவந்தபோது அமொ¢க்க ஜனநாயகத்தின் லட்சணம் மேலும் அம்பலமானது.  பாலியல் சித்ரவதைகள், அடிப்பது, நாயை ஏவிக் கடிக்க வைப்பது, அடித்தே கொல்வது... என அமொ¢க்க ஜனநாயக  சித்ரவதைகளை உலகம் கண்டு வியந்தது.

இப்படிப்பட்ட அமெரிக்க பயங்கரவாதியான  ஜார்ஜ் புஷ்ஷை தான் காதலித்தது போதாது என்று இந்திய மக்கள் அனைவருமே காதலிப்பதாக பொய் சொல்லி இந்தியாவில் வாழ்கின்ற அமைதி விரும்பிகள், போர் எதிர்ப்பாளர்களையும் அவமானப்படுத்தினார் அமொ¢க்க அடிமை மன்மோஹன் சிங்!

"இரவும் பனிமூட்டமும்" என்ற ப்ரொஜெக்ட் (திட்டம்) பற்றிய திரைப்படத்தைப் பற்றி முதலில் குறிப்பிட்டேன்.   இத்திரைப்படத்தில் இரவோடு இரவாகப் பயணிக்கும் ஒரு புகைவண்டி வருகின்றது.  சில வருடங்களுக்கு முன் 'ரெசிடென்ட் ஈவில்' (Resident Evil) என்றொரு ஹாலிவுட் திரைப்படம் வந்தது.  இப்படத்திலும் ஒரு ரயில் வருகின்றது, போகின்றது.  இப்படத்திலும் ஒரு ப்ராஜெக்ட்டுக்காக உழைக்கின்றார்கள்.  அதன் பெயர் அம்ப்ரெல்லா (குடை) (Umbrella).   கற்பனையான ப்ராஜெக்ட்தான்.  ஆனால்   "இரவும் பனிமூட்டமும்"  என்ற ப்ராஜெக்டைப் பார்த்தபின் "குடை"யும் ஏன் உண்மையாக இருக்கக்கூடாது என்று என் மனதில் தோன்றியது.  அது என்ன ப்ராஜெக்ட் என்று நீங்கள் தொ¢ந்துகொள்ள படத்தைப் பார்க்க வேண்டும்.  பார்த்தால் நீங்கள் பு¡¢ந்து கொள்வீர்கள் - ஜெர்மனி ஹிட்லா¢ன் நாஜி சர்வாதிகாரமும் அமெரிக்காவின் 'ஜனநாயக'மும் சந்தித்து சியர்ஸ் சொல்லிக்கொள்ளும்  இடம் எது என்பதை!

-3-

......நோபல் பரிசும்

பாரக் ஒபாமா ஹுசேன் ஆட்சிக்கு வரும் முன்னரே அவர் கறுப்பினத்தவர் என்ற ஒரே காரணத்தை மட்டும் வைத்து,  அவரை தேவதூதன் என்றும், கையில் தீப்பந்தம் ஏந்தாத  சுதந்திரதேவன் என்றும் பக்கம்பக்கமாக எழுதித்தள்ளினார்கள்.  இப்போது அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.  அவரே எதிர்பாராத (?) ஒன்று என்பதால் இந்த அறிவிப்பால் அவர் பதட்டமடைந்தார் என்றும், "நான் பெரிசா என்ன செஞ்சிட்டேன்?" என்று தன்னடக்கத்துடன் பேசியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வளவும் செய்திட்டு எத்தனை அடக்கம்! பெரிய மனுசன்னா சும்மாவா! அடக்கம் அமர்ருல் உய்க்கும்கோ!

"சர்வதேச மக்களிடையே சமாதானத்தையும் நல்லுறவையும் வலுப்படுத்த அவர் எடுத்த முயற்சிகளுக்காகவும், அணுஆயுதங்களற்ற ஒரு உலகை நிறுவுவதற்கான அவரது ஆர்வத்தையும் அதை நோக்கிய பணிகளைப் பாராட்டியும் அமைதிக்கான நோபல் பா¢சை வழங்குகின்றோம்.  உலக அரசியலில் ஒரு புதிய தட்பவெப்ப நிலையை அவர் ஏற்படுத்தியுள்ளார்" என்பதாக நோபல் அமைதிப்பா¢சுக்கான நார்வே நாட்டின் குழுத்தலைவர் தோர்யோர்ன் ஜாக்லாண்ட் அறிவித்துள்ளார்.  மேலும் மேற்கத்திய நாடுகளுக்கும் உலக முஸ்லிம்களுக்கும் இடையே நிலவும் பகையுணர்வைத் தணிக்கவும், ஐரோப்பாவில் ஏவுகணை எதிர்ப்புக் கேடயத்திட்டத்தை உருவாக்குவதற்கான ஜார்ஜ் புஷ்ஷின் திட்டத்தின் தீவிரத்தை மட்டுப்படுத்தவும் (கைவிட அல்ல) ஒபாமா முயற்சி எடுத்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.  இப்படி நீண்ட அறிக்கையைப் பார்த்துத்தான் ஒபாமாவே மிரண்டு போயிருக்கக்கூடும்.


நோபல் அமைதிப்பரிசுக்கான குழுத்தலைவர் தோர்யோர்ன் ஜாக்லாண்ட் சொன்னதை மீண்டும் வாசியுங்கள். "ஒபாமா முயற்சிக்கின்றார், ஒபாமா கனவு காண்கின்றார், ஒபாமா ஆர்வமாய் இருக்கின்றார்".  ஆக இனிமேல் ஏதாவது செய்வார் என்ற நம்பிக்கையில் ஒருவருக்கு நோபல்பரிசு தரப்பட்டுள்ளது.  கனவு காண்பவர்களுக்கெல்லாம் நோபல் பரிசு என்றால் இந்தியாவிலும் ஒரு சிலருக்கு கிடைக்கக்கூடும்.  "உலக அமைதி, போர் இல்லாத உலகம், சமாதானம்" போன்ற மேன்மையான சொற்களை வாயிலிருந்து உதிர்த்ததற்காகவே ஒரு அமொ¢க்க ஜனாதிபதிக்கு நோபல் பா¢சு என்றால், கடந்த கால அமெரிக்க ஜனாதிபதிகளின் லட்சணம் எப்படி இருந்துள்ளது என்பது கேவலமாக வெளிப்படுகின்றது. 

புனிதமான நோபல் பரிசைசவப்பெட்டி வியாபாரிகளுக்கு தரலாமா என்பது போன்ற பிரமைகளோ புலம்பல்களோ நமக்கு இல்லை.  அமெரிக்க  அடிவருடிகளாலும் ஏகாதிபத்திய ஏஜெண்டுகளாலும் அளிக்கப்படும் நோபல் 'பரிசின்' மீது பெரிய மதிப்பு மரியாதை ஏதும் நமக்கு இல்லை.  அதே நேரம் இதுவரை இப்பரிசு பெற்றவர்கள் எல்லோருமே அமெரிக்க ஆதரவாளர்கள் என்றும் நாம் மட்டையாக குற்றம்சாட்டவும் இல்லை,  ஆனால் நோபல்பரிசு  அரசியல் சார்பற்றது என்று சொன்னால் நம்ப நாம் அப்பாவியும் இல்லை.

இணையதளங்களில் தேடியபோது கிடைத்த தகவல்கள் இவை:  1901ஆம் ஆண்டு தொடங்கி 2008ஆம் ஆண்டு வரை மொத்தமாக ஏறத்தாழ 800 நோபல்பரிசுகள் தரப்பட்டுள்ளன. அவற்றில் 759 பின் வரும் நாடுகளுக்கு சென்றுள்ளன: அமெரிக்கா-318, பிரிட்டன்-115, ஜெர்மனி-103, ஃப்ரான்ஸ்-57, ஸ்வீடன்-28, ஸ்விட்சர்லாந்து-25, ரஷ்யா-23, ஆஸ்த்ரியா-20, இத்தாலி-18, கனடா-18, நெதர்லாந்து-18, ஜப்பான்-16.  இவற்றில் ஜப்பான் மட்டுமே ஆசிய நாடு, மீதி அனைத்து நாடுகளும் அமொ¢க்கா, பி¡¢ட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள்.  இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் இதுவரை பெற்ற மொத்த நோபல்கள் 27 மட்டுமே.  ஆப்பிரிக்கக்கண்டத்தின் கதை இன்னும் மோசம். ஒட்டுமொத்த ஆப்பிரிக்கக்கண்டத்துக்கும் 108 வருடங்களில் கிடைத்த பரிசுகள் 18 மட்டுமே.இதில் பாதிப்பேர் தென் ஆப்பிரிக்கர்கள், அல்லது ஆப்பிரிக்காவில் பிறந்து அமெரிக்காவிலோ அதன் கூட்டாளி நாடுகளிலோ இடம்பெயர்ந்து வாழ்பவர்கள். (இந்தியாவுக்கு இதுவரை கிடைத்துள்ள பத்து பரிசுகளில் பெரும்பாலானவை 'இந்திய' இந்தியர்களுக்கு கிடைத்தவை அல்ல, மேற்கு ஐரோப்பாவிலும் வட அமொ¢க்காவிலும் வாழ்கின்ற 'இந்தியா'வில் பிறந்தவர்கள்).

1901க்குப் பின் முதன்முதலாக பூமியின் தெற்குப்பகுதியில் ஒரு நாட்டுக்கு (அர்ஜென்டைனா) நோபல் பரிசு கிடைக்க முப்பத்தைந்து வருடங்கள் ஆனது.

நோபல் அமைதிப்பரிசை மட்டும் பேசுவோம்.  இதுவரை தரப்பட்டுள்ள 119 அமைதிப்பரிசுகள் பூகோளாரீதியாக இப்படித்தான் சென்றுள்ளன: ஐரோப்பிய நாடுகள்-16, ஆசிய நாடுகள்-11, ஆப்பிரிக்க நாடுகள்-4, வடக்கு-தெற்கு அமொ¢க்க நாடுகள்-5.  இதையே குடிமகன்கள் என்ற அடிப்படையில் பார்த்தால்: அமெரிக்கா-24, பிரிட்டன்-15,  ஃப்ரான்ஸ்-9,  ஸ்விட்சர்லாந்து-11, பெல்ஜியம், ஸ்வீடன், தென் ஆப்பி¡¢க்கா-தலா 4, ஆஸ்த்ரியா, இஸ்ரேல்-தலா 3, மீதியுள்ளவை மற்ற நாடுகளுக்கு, ஒன்று, இரண்டு என.  பா¢சு பெற்ற 97 தனிநபர்களில் 76 பேர் வெள்ளையர்கள் என்பது மிக முக்கியமானது, தற்செயலானது அல்ல.  இவர்களில் நிறவெறி தென்னாப்பி¡¢க்காவின் ஜனாதிபதியாக இருந்த வில்லியம் டி க்ளார்க்கும் அடங்குவார்.  10 பேர் ஆசியர்கள், 10 பேர் ஆப்பிரிக்க  வம்சாவழியினர் (கென்யாவின் வாங்காரி மாத்தாய், ஒபாமா உட்பட. இதிலும் கூட ஒபாமா ஆப்பிரிக்க-அமெரிக்கர்). ஒருவர் அமெரிக்க பூர்வகுடி வம்சாவழியர்.

97 தனிநபர் பரிசுகள் வெள்ளையர்களுக்கே போக, ஆப்பிக்கர்களுக்கும் ஆசியர்களுக்கும் வழங்கப்பட்ட அமைதிக்கான பரிசுகள் பெரும்பாலானவை வெள்ளையர்களுடன் அல்லது சில அமைப்புக்களுடன் இணைந்து அதாவது பங்கு வைக்கப்பட்டவை.  உதாரணமாக அன்வர் சதாத்+ மெனகம் பெகின், நெல்சன் மண்டேலா+டி க்ளார்க், யாசர் அராஃபத்+இட்சாக் ராபிப்+சிமோன் பெரேஸ்.  இரண்டாம் உலகப்போருக்கு முந்தைய பரிசுகள் அனைத்தும் ஐரோப்பிய நாடுகளின் கட்டுப்பாட்டில் இருந்த பல அமைப்புக்களுக்கு வழங்கப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது உலக அமைதிக்கு எப்போதுமே கேடு தவிர எதையும் செய்யாத அமெரிக்கா, அதன் சகாக்கள் அமைதிப்பரிசில் ஒட்டிக்கொள்வது என்பது குற்ற உணர்ச்சி அன்றி வேறென்ன?
அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளான பிரிட்டன், ஃப்ரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளும் ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் படையெடுத்து எங்கெல்லாம் தமது காலனிய ஆதிக்கத்தை நிறுவ முயன்றார்களோ அந்தந்த நாடுகளின் பூர்வகுடி மக்களின் எதிர்ப்பை அவர்கள் கடுமையாக எதிர்கொள்ள வேண்டியிருந்தது, அவர்களை தயவுதாட்சண்யம் இன்றி ரத்தவெள்ளத்தில் மூழ்கடிக்க வேண்டியிருந்தது.  எங்கெல்லாம் தமது காலனிய ஆதிக்கத்தை நிறுவ முயன்றார்களோ அந்தந்த நாடுகளின் விடுதலைக்காகப் போராடிய மக்கள் தலைவர்களுக்கு அமைதிக்கான நோபல் பா¢சை வழங்கி, அமிலத்தாலும் கழுவ முடியாத தமது ரத்தக்கறை படிந்த வரலாற்றை மறைக்க முயன்றுள்ளதை நோபல் வரலாற்றைப் பார்த்தால் பு¡¢கின்றது.   குறிப்பாக ஒடுக்கப்பட்ட ஆப்பிரிக்க, ஆப்பிரிக்க-அமெரிக்க  வம்சாவழி மக்களுக்கு வழங்கப்பட்ட பா¢சுகளைப் பார்த்தால் இது புரியும். 

அமொ¢க்காவின் ரோட்னி கிங்கும், லண்டன் சுரங்கப்பாதையில் ஒரு தெரு நாயைப்போல் போலீசால் சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவி பிரேசில் நாட்டு இளைஞன் ஜீன் சார்லஸ் டி மெனிசெசும், 2005ஆம் ஆண்டு அமொ¢க்காவின் நியூ ஆர்லியன்ஸ், லூசியானாவில் வீசிய கத்¡£னா சூறாவளியில் சிக்கி மடிந்த 2000 ஆப்பிரிக்க-அமெரிக்க  மக்களும் கறுப்பாய் பிறந்த ஒரே காரணத்துக்கான சுமையை எப்போதும் சுமக்கும் சின்னங்களாக என்றும் நினைவில் நிற்கின்றார்கள்.  ஆப்பிரிக்க, ஆப்பிரிக்க-அமெரிக்க வம்சாவழி மக்களுக்கு வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல்களின் அர்த்தங்களை ஒபாமா இவர்களிடம் கேட்டால் ஒருவேளை பு¡¢யக்கூடும். 


தொடரும்....2.

கருத்துகள் இல்லை: