யாவும் வெற்று வார்த்தைகள், அவ்வளவே
ஒருவரும் இங்கே மற்றவரின் அன்புக்கு ஆட்பட்டவர் இல்லை
உறவுகள் அனைத்தும் போலித்தனமானவை
உன் கடவுள் உன்னெதிரே இருந்தாலும்
உன்னால் எதுவும் செய்ய முடியாது
வேறு யாருமில்லை, உன் உடலுக்கு தீ மூட்டப்போவது
உன் ரத்த பந்தங்கள்தான்
ஆகாயத்தில் நீ எழும்பி பறக்க
உன் சாம்பலோ மண்ணோடு மண்ணாக கலந்துபோகும்
கொண்டாட்டமான நேரங்களில் உன்னை சுற்றிலும் மக்கள் கூட்டம்
நீ துயருற்ற நேரங்களிலோ உன்னருகில் எவருமிலர்
உலகமக்கள் உன்னுடையவர்கள் ஆவார்கள், எப்போது?
உன் இதயத்தை பிளக்கும்போது
அது சரி, கடவுளையே ஏமாற்றிவிடும் இவர்கள்
மனிதர்களை சும்மா விட்டுவிடுவார்களா என்ன?
இது ஒரு இந்து செய்த காரியம் எனில்
கோவிலை கொள்ளையடித்தது யார்?
இது ஒரு முஸ்லிம் செய்த காரியம் எனில்
கடவுள் வாழும் இல்லத்தை இடித்தது யார்?
இவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாகவும் இருக்கட்டும்,
அந்த மதம் போலித்தனமானது.
....
ஏனோ இந்தப்பாடல் நேற்றும் இன்றும் நினைவில் சுழன்றடிக்கிறது. கஸ்மெ வாதே... என்ற இந்தி மொழிப்பாடல்.
கவிஞர் இண்டீவர் எழுதிய இந்தி பாடல் இது. உப்கார் என்ற இந்திப்படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு கல்யாண்ஜி ஆனந்த்ஜி இசையமைத்தார்கள். பாடலுக்கு திரையில் நடித்தவர் பிரான். பாடலில் ஏன் இத்தனை வெறுமையும் விரக்தியும்? ஒரே தத்துவமழை? பாடலை திரையில் பாருங்கள். பாடல் வரிகளுக்கும் திரையில் விரியும் காட்சிகளுக்கும் வித்தியாசமான குரல் வளம் கொண்ட மன்னா டே நியாயம் செய்துள்ளார். இசையிலும் அந்த வெறுமையின் உயிரோட்டம், ஆம் வெறுமையின் உயிரோட்டம்!
பாலு மகேந்திராவின் நீங்கள் கேட்டவை படத்தில் இப்பாடல் மெட்டு அப்படியே எடுத்துக்கொள்ளப்பட்டது மட்டுமின்றி பாடலும் இதே சாயலில் எழுதப்பட்டது.
பாடலை ஆங்கிலம் வழியாக தமிழில் மொழியாக்கம் செய்தவன் நானே.
... ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக