தமிழக அல்லது இந்திய அரசியலில் ஆகப்பெரிய பஞ்சர் அல்லது விரிசல் அல்லது கேப் அல்லது வெற்றிடம் அல்லது பள்ளம் விழுந்துவிட்டதாகவும் இதை பஞ்சர் ஒட்டி சரி பண்ணும் டெக்னிக் தெரிந்த ஒரே மெக்கானிக் பாபா சைக்கிள் பஞ்சர் கடை ஓனர் மட்டுமே என்பதாகவும் நாடாளுமன்றத்தேர்தலுக்கு சரியாக இரண்டு வருசம் இருக்கும் நிலையில் ‘நடுநிலை’ அல்லது ’உள்ளதை உள்ளபடி’ அல்லது ‘செய்தியை முந்தித்தரும்’ சொல்லும் டிவி சானல்களும் பத்திரிக்கைகளும் திட்டமிட்டபடி ஊதிப்பெருக்கத் தொடங்கிவிட்டன.
பேருந்து நடத்துனர் தொழிலைக் கைவிட்டுவிட்டு ஏறத்தாழ 42 வருசங்களுக்கு முன் அவர் நடிப்புத்தொழிலில் இறங்குகின்றார். அதாவது கார் மெக்கானிக், கட்டிடத்தொழிலாளி, எலக்ட்ரீஷியன், பேருந்து ஓட்டுநர், காய்கறி வியாபாரி, நெசவுத்தொழிலாளி, விவசாயி போன்ற பல தொழிலாளரைப்போல அவர் நடிப்புத்தொழிலில் இறங்குகின்றார். அவர் நடிப்புத்தொழிலில் இறங்கும் காலம் இந்தியாவின் ஜனநாயகம் நசுக்கப்பட்டு பல்லாயிரம் பேர் சிறைகளில் அடைக்கப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட எமெர்ஜென்சி காலம். அதன் பின்னர் 1977இல் மத்தியில் முதல்முறையாக காங்கிரஸ் அல்லாத ஒரு அரசு பதவி ஏற்கின்ற்து.
இந்தியாவில் அரசியல் வரலாறு என்பதை காங்கிரஸ் என்ற ஒரே பெருமுதலாளிகளின் கட்சியை மையமாக வைத்தே எழுதப்பட்ட காலம் 1977 உடன் முடிவுக்கு வந்தது. இடதுசாரி கம்யூனிஸ்ட்டுக்களும் (அவர்கள் ஆட்சியில் அமைச்சர் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டதில்லை, என்றாலும் இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திரஜித் குப்தா அமைச்சராக இருந்தார் என்பது விதிவிலக்கு) அடங்கிய கூட்டணிக்கட்சிகள் அணிசேர்ந்து காங்கிரஸ் அல்லாத ஆட்சிகளை மத்தியில் அமைத்தன – வி.பி.சிங், தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் தலைமையிலான அரசுகள், தேசவிடுதலைக்குப்பின் செல்வாக்குச் சரிந்த நிலையில் கம்யூனிஸ்ட்டுக்களின் ஆதரவுடன் அமைந்த காங்கிரஸ் அரசுகள் அமைந்தன. வலதுசாரி அதிதீவிர இந்துதுவா அமைப்பான ஆர் எஸ் எஸ்-சின் கட்சி அமைப்பான பாரதீய ஜனதா கட்சியும் பிற கட்சிகளின் ஆதரவுடன் ஒரு முறை ஆட்சியமைத்தது (தமிழகத்தின் இருபெரும் திராவிடக்கட்சிகளான திமுகவும் அதிமுகவும் வெவ்வேறு காலகட்டங்களில் அதிதீவிர வலதுசாரி இந்துதுவா கட்சியான பிஜேபிக்கு ஆதரவளித்தன); மற்றொரு முறை ஆட்சியமைக்க ஆசைப்பட்டு மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் கீழே இறங்கியது; 2014இல் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.
1990க்குப் பிறகு இத்தேசம் நரசிம்மராவ் அரசின் கீழும் அதன் பின்னர் அமைந்த மன்மோகன்சிங் அரசின் கீழும் புதியதொரு அழிவுப்பாதையில் பயணித்தது. இத்தேசத்தில் கோடீசுவரர்களின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே செல்ல, இணையாக குடியிருக்க வீடில்லாத, ஒரு வேளை உணவும் உண்ணக்கிடைக்காத மக்களின் எண்ணிக்கை பல பத்துக்கோடிகள் உயர்ந்து கொண்டே சென்றது.
2014க்கு முன்பு இருமுறை ஆட்சியமைத்தபோதும், 2014இல் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களைப் பெற்று ஆட்சியமைத்த போதும் ஆர் எஸ் எஸ்-சின் அரசியல் கட்சிப்பிரிவான பிஜேபியும் இந்திய – சர்வதேச பெருமுதலாளிகளுக்கு ஆதரவான காங்கிரசின் அதே பொருளாதாரக்கொள்கைகளை ஓரெழுத்தும் மாறாமல் அப்படியே பின்பற்றிச்செல்கின்றது, சரியாகச் சொன்னால் 2014க்குப் பிறகு காங்கிரசை விடவும் மிக வேகமாகச் செல்கின்றது; அது மட்டுமின்றி உள்நாட்டு+வெளிநாட்டுப் பெருமுதலாளிகளுக்கு ஆதரவான தனது அரசியல் பொருளாதாரக் கொள்கைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் நோக்கில் 1947க்கு பிறகு இத்தேசத்தில் பெரும்பான்மை இந்து சமய மக்களுக்கும் சிறுபான்மையினரான இஸ்லாமிய கிறித்துவ மக்களுக்கும் இடையே திட்டமிட்ட பிரிவினையை ஏற்படுத்தி மிகப்பெரும் மதக்கலவரங்களைத் தூண்டிவிட்டு கொத்துக்கொத்தாக இந்தியமக்கள் சாவதற்கான பெரும் காரணியாக உள்ளது.
கூடவே இந்துசமய ஒற்றுமையை பேசிக்கொண்டே இந்து சமயத்திலேயே இருக்கின்ற பட்டியல் சாதி மக்களுக்கும் பழங்குடி மக்களுக்கும் எதிரான அனைத்து சதிவேலைகளையும் செய்துகொண்டே இருக்கின்றது. பெருமுதலாளிகளின் நலன் பொருட்டு பழங்குடிமக்களின் வாழிடங்களில் இருந்து அவர்களை போலீஸ் மற்றும் ராணுவ அடக்குமுறைகள் மூலம் வெளியேற்றுகின்ற்து. தனிமனிதர்களின் – குறிப்பாக சிறுபான்மை மதத்தவர்கள் மற்றும் தலித் மக்களின் உணவுப்பழக்கங்களில், பண்பாட்டு வழக்கங்களில் தலையிடும் இந்துத்துவா அமைப்புக்களின் அஜெண்டாவை அரசு ஆணைகள் வடிவில் தடாலடியாக வெளியிட்டு பிஜேபி அரசு நிறைவேற்றிக்காட்டுகின்றது. இதன் விளைவாக பிஜேபி ஆளும் மாநிலங்களில் இந்து சமயத்திலேயே இருக்கின்ற தலித் மக்களும், இஸ்லாமிய மக்களும் படுகொலை செய்யப்படுவது தொடர் நிகழ்வாக நடந்துகொண்டே இருக்கின்றது.
தமிழகஅரசுக்காக மாடுகளை வாங்கச்சென்ற அதிகாரிகள் அதாவது அரசு ஊழியர்களும் வாகன ஓட்டுநர்களும் பிஜேபி ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்துமதவெறிக்கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டதைப் பார்க்க முடிந்தது. மாட்டுக்கறி தொடர்பான மத்திய ஆர் எஸ் எஸ் அரசின் சர்வாதிகார உத்தரவை நிராகரிப்போம் என்று உடனடியாக தனது எதிர்ப்பை வெளியிட்ட கேரள் மார்க்சிஸ்ட் கட்சியின் முதல்வரின் அணுகுமுறை எங்கே, ஆணையை இன்னும் படித்துப்பார்க்கவில்லை என்று சொல்கின்ற, தனது அரசின் அதிகாரிகள் தாக்கப்பட்டதைக்கூட குறைந்த பட்சம் மென்மையான சொற்களால் கூடக் கண்டிக்க முன்வராத தமிழக அரசின் முதல்வர் எங்கே?
கூடவே இந்துசமய ஒற்றுமையை பேசிக்கொண்டே இந்து சமயத்திலேயே இருக்கின்ற பட்டியல் சாதி மக்களுக்கும் பழங்குடி மக்களுக்கும் எதிரான அனைத்து சதிவேலைகளையும் செய்துகொண்டே இருக்கின்றது. பெருமுதலாளிகளின் நலன் பொருட்டு பழங்குடிமக்களின் வாழிடங்களில் இருந்து அவர்களை போலீஸ் மற்றும் ராணுவ அடக்குமுறைகள் மூலம் வெளியேற்றுகின்ற்து. தனிமனிதர்களின் – குறிப்பாக சிறுபான்மை மதத்தவர்கள் மற்றும் தலித் மக்களின் உணவுப்பழக்கங்களில், பண்பாட்டு வழக்கங்களில் தலையிடும் இந்துத்துவா அமைப்புக்களின் அஜெண்டாவை அரசு ஆணைகள் வடிவில் தடாலடியாக வெளியிட்டு பிஜேபி அரசு நிறைவேற்றிக்காட்டுகின்றது. இதன் விளைவாக பிஜேபி ஆளும் மாநிலங்களில் இந்து சமயத்திலேயே இருக்கின்ற தலித் மக்களும், இஸ்லாமிய மக்களும் படுகொலை செய்யப்படுவது தொடர் நிகழ்வாக நடந்துகொண்டே இருக்கின்றது.
தமிழகஅரசுக்காக மாடுகளை வாங்கச்சென்ற அதிகாரிகள் அதாவது அரசு ஊழியர்களும் வாகன ஓட்டுநர்களும் பிஜேபி ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்துமதவெறிக்கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டதைப் பார்க்க முடிந்தது. மாட்டுக்கறி தொடர்பான மத்திய ஆர் எஸ் எஸ் அரசின் சர்வாதிகார உத்தரவை நிராகரிப்போம் என்று உடனடியாக தனது எதிர்ப்பை வெளியிட்ட கேரள் மார்க்சிஸ்ட் கட்சியின் முதல்வரின் அணுகுமுறை எங்கே, ஆணையை இன்னும் படித்துப்பார்க்கவில்லை என்று சொல்கின்ற, தனது அரசின் அதிகாரிகள் தாக்கப்பட்டதைக்கூட குறைந்த பட்சம் மென்மையான சொற்களால் கூடக் கண்டிக்க முன்வராத தமிழக அரசின் முதல்வர் எங்கே?
இத்தகு மோசமான சூழலில் பல்வேறு மாநிலங்களில் இருக்கின்ற மாநிலக்கட்சிகளில் – இவற்றில் அடையாள அரசியல் நடத்தும் கட்சிகளும் உண்டு – சில அல்லது பல பிஜேபியுடன் கைகோர்த்துள்ளதையும் பிற கட்சிகள் பிஜேபியின் எதிரணியில் காங்கிரசுடனோ இட்துசாரிகளுடனோ நின்று போராடுவதையும் பார்க்கின்றோம்.
தமிழகத்தில் டிசம்பர் மாதம் ஜெயலலிதா மரணம் அடைந்த பின்னர், தத்துவ அரசியல் கோட்பாடு ஏதுமில்லாத ஆனால் தனிநபர் செல்வாக்கினால் மட்டுமே ஊதிப்பெரிதாகிய ஒரு முதலாளித்துவ இயக்கம் அந்நபர் மரணம் அடையும்போது சந்திக்க நேர்கின்ற சரிவை அதிமுக என்னும் அரசியல் கட்சி சந்தித்த்து, அந்த இயக்கம் உடைந்தது அல்லது உடைக்கப்பட்டது. கெடுவாய்ப்பாக திட்டவட்டமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட அரசியல்-பொருளாதாரக் கொள்கைகோட்பாடற்ற, ஊழலும் லஞ்சலாவண்யமும் மலிந்து கிடக்கின்ற, இதே காரணங்களுக்காக ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள பொதுச்செயலாளரைக் கொண்டுள்ள அந்த இயக்கத்தை மத்தியில் ஆள்கின்ற வலதுசாரி இந்துத்துவா பிஜேபி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துவிட்ட்தைக் காண முடிகின்றது; உடைந்துபோனாலும் உடைந்துபோன குழுக்களும் பிஜேபியின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன என்பதை தமிழகமக்கள் அறிவார்கள்.
தமிழகத்தின் கட்சி அரசியல் சூழல் இப்படித் தெளிவாகத்தெரிகின்ற அள்வில்தான் சீர்குலைந்துபோய் கிடக்கின்றதே அன்றி நடப்பது எதுவும் மக்களுக்குப் புரியாமலோ புலப்படாமலோ இல்லை என்பது உண்மை. இரண்டாவது பெரிய கட்சியான திமுக மக்கள் மத்தியில் இப்போதும் செல்வாக்கை இழந்துவிடவில்லை என்பது உண்மை; இந்திய அளவிலும் தமிழகத்திலும் அப்பழுக்கற்ற தமது அரசியல் நடவடிக்கைகளை இடதுசாரி கம்யூனிஸ்ட்டுக்கள் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கின்றார்கள் என்பதும் உண்மை. இவை யாவும் எத்தனை உண்மையோ அதே அளவுக்கு வலதுசாரி இந்துத்துவா சக்தியான பிஜேபி தமிழக மக்கள் மத்தியில் அத்தனை எளிதாக காலூன்றிவிட முடியாது என்பதும் உண்மை. மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாத நிலையில் அதிமுக அல்லது திமுகவுடன் பிஜேபி கூட்டணி அமைத்தால் ஓரிரண்டு எம் எல் ஏ அல்லது எம்.பி. சீட்டுக்களை வேண்டுமானால் வெல்லமுடியும். ஆனால் பெருமுதலாளிகளால் நடத்தப்படுகின்ற டிவி சானல்களும் பத்திரிக்கைகளும் தமிழக அரசியலில் பெரிய பஞ்சர் விழுந்து விட்டதாகவும் அதை ஒட்டி சரிபார்க்கும் டெக்னிக் தெரிந்த ஒரே பஞ்சர் மெக்கானிக் நடிப்புத்தொழிலில் கடந்து 42 வருடங்களாக ஈடுபட்டுள்ள ரஜினிகாந்த் என்பதாகவும் கடந்த சில மாதங்களாக திட்டமிட்ட பெரும்பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன.
மத்திய மாநில ஆட்சியாளர்களின் பெருமுதலாளிகளுக்கு ஆதரவான கொள்கைகளினால் கடந்த 42 வருடங்களில் இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழகத்திலும் பாதிக்கப்பட்டு ஏதோ ஒரு ஜனநாயக இயக்கத்தின் அல்லது அரசியல் கட்சியின் பின்னால் அணிதிரண்டு வீதிகளில் இறங்கிப்போராடுகின்ற, போலீசின் அடக்குமுறைகள் அடிதடிகள் அனைத்தையும் நேர்கொண்டு இப்போதும் தமது போராட்டத்தைத் தொடர்கின்ற சாமானிய இந்தியத்தொழிலாளிக்கும் விவசாயிக்கும் தமிழகத்தொழிலாளிக்கும் விவசாயிக்கும் இருக்கின்ற ஆட்சியாளர்களுக்கு எதிரான குறைந்தபட்ச கோபாவேசமும் குறைந்த பட்ச அரசியலறிவும் கூட இல்லாத, எந்த வித அரசியல் தத்துவச்சார்பையும் இதுகாறும் வெளிக்காட்டாத ஆனால் தேசத்தின் மக்கள் பிரச்னைகளில் சிக்கி அல்லலுறுகின்ற மிக மோசமான நேரங்களிலும் (உதாரணமாக நவம்பர் 8 பணமதிப்புக்குறைப்பு, மதக்கலவரங்கள், மாட்டுக்கறி தொடர்பான கொலைபாதகங்கள்) தனது கனத்த மவுனத்தின் வாயிலாக வலதுசாரி ஆட்சியாளர்களுக்கு ஆதரவான தனது அணுகுமுறையை தவறாது வெளிப்படுத்தி வந்திருக்கின்ற, சாமானிய மக்கள் கண்ணுற்றும் அனுபவித்தும் வருகின்ற துன்பதுயரங்கள் குறித்து ஒற்றை முணுமுணுப்பையும் கூட கடந்த 42 வருடங்களில் வெளிக்காட்டாமல் திட்டமிட்டு தொடர்ந்து தனது சுயநல அடிப்படையிலான ஆனால் ஆட்சியாளர்களுக்கு ஆதரவான மவுனத்தை மட்டுமே கடைப்பிடித்து வருகின்ற, தனது திரைப்படங்கள் ஓட வேண்டும் என்ற ஒற்றைநோக்கோடு மட்டுமே அவ்வப்போது காரை விட்டு வெளியே இறங்கி கல்யாண மண்டபங்களில் கூட்டம்கூட்டுகின்ற ரஜினிகாந்த் என்ற நடிகரை வலதுசாரி இந்துத்துவா சக்திகள் தமது திட்டமிட்ட நலன் கருதி இன்றைய தமிழகச் சூழலில் முன்னிறுத்தி திசைதிருப்பல் வேலையில் இறங்கியுள்ளன என்பதும் இவ்வலதுசாரி சக்திகளுக்கு தமிழகத்தின் பெருமுதலாளிகள் தமது நலன் கருதி தமது டிவி சானல்கள், பத்திரிக்கைகள் உள்ளிட்ட ஊடகங்களை பிரச்சாரக்கருவிகளாக களத்தில் இறக்கிவிட்டுள்ளார்கள் என்பதும் உண்மை.
வலதுசாரி இந்துத்துவா சக்திகளின் திட்டமிட்ட இப்பிரச்சாரத்தை தமிழகத்தின் ஜனநாயக சக்திகளும் இட்துசாரி சக்திகளும் ஒன்றிணைந்து அம்பலப்படுத்த வேண்டும். தமிழகத்தின் இரண்டாவது பெரிய கட்சி ’எதிர்காலத்தில் இந்த நடிகர் தமக்கு ஏதாவது ஒரு வகையில் உதவக்கூடும்’ என்ற நப்பாசையில் வேடிக்கை பார்த்தாலோ மவுனம் காத்தாலோ இதே நடிகரைப்பயன்படுத்தி இந்துத்துவா சக்திகள் இரண்டாவது பெரிய கட்சியையும் சின்னாபின்னப்படுத்துவார்கள் என்பது உறுதி. உலகவரலாறு நெடுகிலும் அடக்குமுறைகளையும் உயிர்ப்பலிகளையும் சந்தித்து வந்துள்ள இடதுசாரிசக்திகள் இச்சவாலையும் எவ்விதத்தயக்கமும் இன்றிச் சந்திப்பார்கள்.