அன்பிற்குரிய கமல்ஹாசன் அவர்களுக்கு,


கருத்து சுதந்திரம் பற்றி விரிவாக பேசப்படுகின்றது. உண்மைதான். விஸ்வரூபம் வெளிவரட்டும். ஆனால் படைப்பாளிக்கு சுதந்திரமும் வேண்டும், சமூகப்பொறுப்பும் வேண்டும் என்பது கமலஹாசன் விசயத்தில் மட்டும் மறந்து விடுமோ?
1) ‘ஹுசேன் கடல்கடந்தால் ஹாசன் கடக்க கூடாதா?’ – கமலஹாசன். ஹுசேன் ஒருபோதும் ஒரு குறிப்பிட்ட மதத்து மக்களை தீவிரவாதிகளாக சித்தரித்து ஓவியம் தீட்டியது இல்லை. உன்னைப்போல் ஒருவனில் வரலாறு பேசுகின்றேன் என்ற பெயரில் கமல்ஹாசன் வரலாற்றை புரட்டவில்லையா? ஹுசேனுடன் தன்னை ஒப்பிட்டுபேசுவது துணைக்கு ஆள் சேர்க்கும் முயற்சி.

2) ‘என் சொத்துக்கள் அத்தனையும் விற்றுவிட்டேன், இனி என்னிடம் எதுவும் இல்லை’-கமலஹாசன். இந்திய இஸ்லாமியர்களின் பொருளாதார நிலையை சொல்லும் ராஜீந்தர் சச்சார் குழுவின் அறிக்கையை அவர் வாசிக்க வேண்டும்.
3) தலித்கள், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற சிறுபான்மை மக்களைவிடவும் முஸ்லிம்கள் மிக மோசமாகத் தாழ்ந்து கிடக்கிறார்கள்
• நாடு முழுதும் மிகக் குறைந்த வருமானம் முஸ்லிம்களுக்கு
• நகர்ப்புற ஏழை இந்தியர் சராசரி விகிதம் 22.8% ; ஆனால் முஸ்லிம்கள் 28%
• நீதித்துறையில் மிகப் பிற்படுத்தப் பட்டோர்/ தாழ்த்தபட்டோர் 23% மற்றும் 20%; ஆனால் முஸ்லிம்கள் வெறும் 7.8% மட்டுமே!
• 14 லட்சம் பப்ளிக் சர்வீஸ் பணிகளில் முஸ்லிம்கள் வெறும் 7.2%; அதுவும்கூட மிகக் கீழ்மட்டப் பணிகளில்தான்.
• நாட்டின் உயர் அரசுப் பணிகளில் வெறும் 3% (ஐ.ஏ.எஸ்: 3%; ஐ.எ•ப்.எஸ்: 1.8%; ஐ.பி.எஸ்: 4%)
• மாநில வாரியாக முஸ்லிம் மக்கள் தொகைக்கும் அவர்களது வேலைவாய்ப்பு நிலைக்கும் சம்பந்தமே இல்லாத நிலைமை நிலவுகிறது:
உதாரணம்:
அஸ்ஸாம்: முஸ்லிம்கள் 30.9% ; ஆனால் பணியில் 11.2% மட்டுமே
மேற்குவங்கம்: முஸ்லிம்கள் 25.2% ; ஆனால் பணியில் 4.2% மட்டுமே
உத்தரப்பிரதேசம்: 18.5%; 5.1%
பீஹார் : 16.5% ; 7.6%
தமிழ்நாடு : 5.6%; 3.2%
கேரளா : 24.7% ; 10.4%
ஆந்திரா : 9.2%; 8.8%
கேரளா மற்றும் ஆந்திராவில் மட்டுமே சற்றே அதிக விகிதாச்சாரம்.
3)’இந்திய முஸ்லிம்களில் 94.8 சதவிகிதத்தினர் வறுமைக்கோட்டுக் கீழ் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.’ இதுதான் இந்திய இஸ்லாமியர்களின் நிலைமை. பொருளாதாரத்தில் நலிந்து கிடக்கும் இஸ்லாமிய மக்களை, உங்கள் சொத்துக்களை அடகு வைத்து 100 கோடி செலவில் மோசமாக சித்தரிக்க வேண்டிய அவசியம் என்ன சார்? (படம் பார்த்தவர்கள் அப்படித்தான் சொல்கின்றார்கள், சொல்வதை தள்ள முடியுமா?).
4) உங்கள் சக நண்பர்களான விஜயகாந்த், அர்ஜுன் (ஐயோ, இந்த ரெண்டு பேர் மட்டும் இல்லைன்னா இந்தியாவை பாகிஸ்தான்காரன் எப்போவோ திருடிட்டு போயிருப்பான்!) படங்கள் சித்தரித்தது என்ன? இந்திய இஸ்லாமிய மக்களுக்கு 24 மணி நேரமும் பாகிஸ்தானுக்கு உளவு சொல்வதைத்தவிர வேறு வேலையே இல்லை என்பதைத்தானே! கோடம்பாக்கத்தில் ஒட்டுத்தாடியும் குல்லாவும் அஞ்சு ரூபாவுக்கும் பத்து ரூபாவுக்கும் சல்லிசாக விற்கின்றது என்பதற்காக வில்லன்கள் எல்லாருக்கும் முஸ்லிம் பெயரை வைத்து முஸ்லிம்கள் அனைவரையும் தேசத்துரோகியாக்கியது என்ன நியாயம்? ஒரு படமா இரண்டு படமா, எத்தனை படங்கள் வரிசையாக? இவர்களோடு சேர்ந்து நீங்களும் இஸ்லாமியர்களை உன்னைப்போல் ஒருவனில் தீவிரவாதிகளாகத்தானே காட்டினீர்கள்?
5) திரை உலகமும் கலை உலகமும் கமலஹாசனுக்கு பின்னால் திரண்டு நிற்கின்றதாம். கருத்து சுதந்திரமாம். கருணாநிதி ஆதரவு தருவதுபோல் ஜெயலலிதாவுக்கு எதிராக கேவல அரசியல் நடத்த முயல்கின்றார்; ரஜினி கடிதம் எழுதுகின்றார். விஜயகாந்தும் அர்ஜூனும் தொடர்ந்து இஸ்லாமிய மக்களை தீவிரவாதிகளாக பாகிஸ்தானிய உளவாளிகளாக சித்தரித்த போது இந்த கோடம்பாக்கத்து கலையுலகமும் கருணாநிதியும் ரஜினியும் இன்னபிற கருத்துசுதந்திர வக்கீல்களும் எங்கே போனார்கள்? விஜயகாந்தையோ அர்ஜூனையோ படம் எடுத்த இயக்குனர்களையோ ஒற்றை வார்த்தை சொல்லி கண்டித்ததாக ஏதாவது சான்று உண்டா? நீங்கள் மட்டுமல்ல, அரசியல் கட்சிகளும் இதை மௌனமாக வேடிக்கைதான் பார்த்தார்கள்; ஒருவேளை விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்க கூடும், அந்த நேரத்தில் அவரோடு கூட்டணி வைக்கவும் கூடும் என்ற எச்சரிக்கை உணர்வாக இருக்கலாம்.
6) ’வெளிநாட்டில் குடியேறுவேன்’-கமலஹாசன். கடல்கடந்து குடியேறும் அளவுக்காவது அவரிடம் பொருளாதார வசதி உள்ளது. ஆனால் பாபர் மசூதிக்குப்பின் நடந்த பல குண்டுவெடிப்புக்களுக்கு பின் தமிழகத்தின் பல பகுதிகளில் வாடகைக்கு குடியிருந்த முஸ்லிம் மக்களை வீட்டை காலி செய்யுமாறு வீட்டு உரிமையாளர்கள் வற்புறுத்தி வெளியேற்றியதை நீங்கள் அறிவீர்களா? குறிப்பாக கோவை குண்டுவெடிப்புக்களுக்குப் பின் கோவையில் வசித்த இஸ்லாமிய மக்கள் கூட்டம் கூட்டமாக கோவையை விட்டு வெளியேறும் அளவுக்குத்தான் நிலைமை இருந்தது. நீங்களோ வெளிநாட்டில் குடியேறுவேன் என சொல்ல, தமிழக இஸ்லாமியர்களோ சொந்த நாட்டில் வீடில்லாமல் அலைந்தார்கள். 2002க்கு பிறகு குஜராத்தில் இஸ்லாமியர்களின் நிலை இப்போதும் இப்படித்தானாம்.
7) நீங்கள் எடுக்கும் காட்சிகளுக்கும் வசனங்களுக்கும் வரலாற்று ஆதாரங்கள் இருப்பதாக கூறுகின்றீர்களாம். உங்கள் விஸ்வரூபம் திரைப்படத்தில் இப்படி ஒரு வசனம் இருக்கிறதாமே: “அமெரிக்கர்கள் குழந்தைகளையும் பெண்களையும் கொல்ல மாட்டார்கள். எனவே அவர்கள் வீட்டிலேயே இருக்கட்டும்””””. ’’இதுக்கு ஆதாரம் உண்டோ உங்களிடம்? அரவாக் இனமக்களின் படுகொலை தொடங்கி அமெரிக்கா கட்டிய கட்டுகின்ற சமாதிகளின் எண்ணிக்கை பல கோடிகளைத் தாண்டும் என்பது உங்களுக்கு தெரியாது என்று நாங்கள் நம்ப வேண்டுமா?


கருத்து சுதந்திரம் பற்றி விரிவாக பேசப்படுகின்றது. உண்மைதான். விஸ்வரூபம் வெளிவரட்டும். ஆனால் படைப்பாளிக்கு சுதந்திரமும் வேண்டும், சமூகப்பொறுப்பும் வேண்டும் என்பது கமலஹாசன் விசயத்தில் மட்டும் மறந்து விடுமோ?
1) ‘ஹுசேன் கடல்கடந்தால் ஹாசன் கடக்க கூடாதா?’ – கமலஹாசன். ஹுசேன் ஒருபோதும் ஒரு குறிப்பிட்ட மதத்து மக்களை தீவிரவாதிகளாக சித்தரித்து ஓவியம் தீட்டியது இல்லை. உன்னைப்போல் ஒருவனில் வரலாறு பேசுகின்றேன் என்ற பெயரில் கமல்ஹாசன் வரலாற்றை புரட்டவில்லையா? ஹுசேனுடன் தன்னை ஒப்பிட்டுபேசுவது துணைக்கு ஆள் சேர்க்கும் முயற்சி.

2) ‘என் சொத்துக்கள் அத்தனையும் விற்றுவிட்டேன், இனி என்னிடம் எதுவும் இல்லை’-கமலஹாசன். இந்திய இஸ்லாமியர்களின் பொருளாதார நிலையை சொல்லும் ராஜீந்தர் சச்சார் குழுவின் அறிக்கையை அவர் வாசிக்க வேண்டும்.
3) தலித்கள், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற சிறுபான்மை மக்களைவிடவும் முஸ்லிம்கள் மிக மோசமாகத் தாழ்ந்து கிடக்கிறார்கள்
• நாடு முழுதும் மிகக் குறைந்த வருமானம் முஸ்லிம்களுக்கு
• நகர்ப்புற ஏழை இந்தியர் சராசரி விகிதம் 22.8% ; ஆனால் முஸ்லிம்கள் 28%
• நீதித்துறையில் மிகப் பிற்படுத்தப் பட்டோர்/ தாழ்த்தபட்டோர் 23% மற்றும் 20%; ஆனால் முஸ்லிம்கள் வெறும் 7.8% மட்டுமே!
• 14 லட்சம் பப்ளிக் சர்வீஸ் பணிகளில் முஸ்லிம்கள் வெறும் 7.2%; அதுவும்கூட மிகக் கீழ்மட்டப் பணிகளில்தான்.
• நாட்டின் உயர் அரசுப் பணிகளில் வெறும் 3% (ஐ.ஏ.எஸ்: 3%; ஐ.எ•ப்.எஸ்: 1.8%; ஐ.பி.எஸ்: 4%)
• மாநில வாரியாக முஸ்லிம் மக்கள் தொகைக்கும் அவர்களது வேலைவாய்ப்பு நிலைக்கும் சம்பந்தமே இல்லாத நிலைமை நிலவுகிறது:
உதாரணம்:
அஸ்ஸாம்: முஸ்லிம்கள் 30.9% ; ஆனால் பணியில் 11.2% மட்டுமே
மேற்குவங்கம்: முஸ்லிம்கள் 25.2% ; ஆனால் பணியில் 4.2% மட்டுமே
உத்தரப்பிரதேசம்: 18.5%; 5.1%
பீஹார் : 16.5% ; 7.6%
தமிழ்நாடு : 5.6%; 3.2%
கேரளா : 24.7% ; 10.4%
ஆந்திரா : 9.2%; 8.8%
கேரளா மற்றும் ஆந்திராவில் மட்டுமே சற்றே அதிக விகிதாச்சாரம்.
3)’இந்திய முஸ்லிம்களில் 94.8 சதவிகிதத்தினர் வறுமைக்கோட்டுக் கீழ் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.’ இதுதான் இந்திய இஸ்லாமியர்களின் நிலைமை. பொருளாதாரத்தில் நலிந்து கிடக்கும் இஸ்லாமிய மக்களை, உங்கள் சொத்துக்களை அடகு வைத்து 100 கோடி செலவில் மோசமாக சித்தரிக்க வேண்டிய அவசியம் என்ன சார்? (படம் பார்த்தவர்கள் அப்படித்தான் சொல்கின்றார்கள், சொல்வதை தள்ள முடியுமா?).
4) உங்கள் சக நண்பர்களான விஜயகாந்த், அர்ஜுன் (ஐயோ, இந்த ரெண்டு பேர் மட்டும் இல்லைன்னா இந்தியாவை பாகிஸ்தான்காரன் எப்போவோ திருடிட்டு போயிருப்பான்!) படங்கள் சித்தரித்தது என்ன? இந்திய இஸ்லாமிய மக்களுக்கு 24 மணி நேரமும் பாகிஸ்தானுக்கு உளவு சொல்வதைத்தவிர வேறு வேலையே இல்லை என்பதைத்தானே! கோடம்பாக்கத்தில் ஒட்டுத்தாடியும் குல்லாவும் அஞ்சு ரூபாவுக்கும் பத்து ரூபாவுக்கும் சல்லிசாக விற்கின்றது என்பதற்காக வில்லன்கள் எல்லாருக்கும் முஸ்லிம் பெயரை வைத்து முஸ்லிம்கள் அனைவரையும் தேசத்துரோகியாக்கியது என்ன நியாயம்? ஒரு படமா இரண்டு படமா, எத்தனை படங்கள் வரிசையாக? இவர்களோடு சேர்ந்து நீங்களும் இஸ்லாமியர்களை உன்னைப்போல் ஒருவனில் தீவிரவாதிகளாகத்தானே காட்டினீர்கள்?
5) திரை உலகமும் கலை உலகமும் கமலஹாசனுக்கு பின்னால் திரண்டு நிற்கின்றதாம். கருத்து சுதந்திரமாம். கருணாநிதி ஆதரவு தருவதுபோல் ஜெயலலிதாவுக்கு எதிராக கேவல அரசியல் நடத்த முயல்கின்றார்; ரஜினி கடிதம் எழுதுகின்றார். விஜயகாந்தும் அர்ஜூனும் தொடர்ந்து இஸ்லாமிய மக்களை தீவிரவாதிகளாக பாகிஸ்தானிய உளவாளிகளாக சித்தரித்த போது இந்த கோடம்பாக்கத்து கலையுலகமும் கருணாநிதியும் ரஜினியும் இன்னபிற கருத்துசுதந்திர வக்கீல்களும் எங்கே போனார்கள்? விஜயகாந்தையோ அர்ஜூனையோ படம் எடுத்த இயக்குனர்களையோ ஒற்றை வார்த்தை சொல்லி கண்டித்ததாக ஏதாவது சான்று உண்டா? நீங்கள் மட்டுமல்ல, அரசியல் கட்சிகளும் இதை மௌனமாக வேடிக்கைதான் பார்த்தார்கள்; ஒருவேளை விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்க கூடும், அந்த நேரத்தில் அவரோடு கூட்டணி வைக்கவும் கூடும் என்ற எச்சரிக்கை உணர்வாக இருக்கலாம்.
6) ’வெளிநாட்டில் குடியேறுவேன்’-கமலஹாசன். கடல்கடந்து குடியேறும் அளவுக்காவது அவரிடம் பொருளாதார வசதி உள்ளது. ஆனால் பாபர் மசூதிக்குப்பின் நடந்த பல குண்டுவெடிப்புக்களுக்கு பின் தமிழகத்தின் பல பகுதிகளில் வாடகைக்கு குடியிருந்த முஸ்லிம் மக்களை வீட்டை காலி செய்யுமாறு வீட்டு உரிமையாளர்கள் வற்புறுத்தி வெளியேற்றியதை நீங்கள் அறிவீர்களா? குறிப்பாக கோவை குண்டுவெடிப்புக்களுக்குப் பின் கோவையில் வசித்த இஸ்லாமிய மக்கள் கூட்டம் கூட்டமாக கோவையை விட்டு வெளியேறும் அளவுக்குத்தான் நிலைமை இருந்தது. நீங்களோ வெளிநாட்டில் குடியேறுவேன் என சொல்ல, தமிழக இஸ்லாமியர்களோ சொந்த நாட்டில் வீடில்லாமல் அலைந்தார்கள். 2002க்கு பிறகு குஜராத்தில் இஸ்லாமியர்களின் நிலை இப்போதும் இப்படித்தானாம்.
7) நீங்கள் எடுக்கும் காட்சிகளுக்கும் வசனங்களுக்கும் வரலாற்று ஆதாரங்கள் இருப்பதாக கூறுகின்றீர்களாம். உங்கள் விஸ்வரூபம் திரைப்படத்தில் இப்படி ஒரு வசனம் இருக்கிறதாமே: “அமெரிக்கர்கள் குழந்தைகளையும் பெண்களையும் கொல்ல மாட்டார்கள். எனவே அவர்கள் வீட்டிலேயே இருக்கட்டும்””””. ’’இதுக்கு ஆதாரம் உண்டோ உங்களிடம்? அரவாக் இனமக்களின் படுகொலை தொடங்கி அமெரிக்கா கட்டிய கட்டுகின்ற சமாதிகளின் எண்ணிக்கை பல கோடிகளைத் தாண்டும் என்பது உங்களுக்கு தெரியாது என்று நாங்கள் நம்ப வேண்டுமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக