புதன், ஜூலை 11, 2012

உழுதுண்டு வாழ்வாரே....வாழ்வார்? - 3











உழைப்பாளிகள் இடம்பெயர்வதும் கிராமப்புறங்களில் ஏற்படும் பிரச்னைகளும்:

2001-2011 மக்கட்தொகை கணக்கெடுப்பில் காணப்பட்ட பெரும் அபாயம் இடப்பெயர்ச்சிதான், இந்தப்பத்தாண்டுகளில்தான் கடந்த 90 வருடங்களில் இல்லாத அளவுக்கு கிராமப்புற மக்கள் நகரங்களை நோக்கி பெரும் அளவில் இடம்பெயர்ந்தார்கள். நகரங்களில் கட்டிட வேலைகளில் பிரதானமாக ஈடுபடுகின்றார்கள். ஆனால் ஒழுங்கான குடியிருப்பு, கழிப்பிட வசதி இல்லை, அவர்களது குழந்தைகளின் படிப்பு பற்றி சொல்லவேண்டிய அவசியம் இல்லை.்ரதானமாக ஈடுபடுகின்றார்கள்.
் இடப்பெயர்ச்சிதான்,்பவர்களின் எண்ணிக்கை க்டந்த 20 ஆண்டுகளில் இரு மடங்

ஒரிசாவின் கஞ்சம் மாவட்ட்த்தில் இருந்து இடம்பெயர்ந்த 4 லட்சம்  தொழிலாளிகள் இப்போது குஜராத்தில் விசைத்தறி வேலைகளில் அடிமாட்டு கூலிக்கு தினமும் 12 மணி நேர வேலை செய்கின்றார்கள். புதிய பொருளாதாரக்கொள்கையின் விளைவாக விசைத்தறி உள்ளிட்ட தொழில்கள் அழிவை நோக்கிசெல்லும்போது இத்தொழிலாளிகளுக்கு லே-ஆஃப் விடப்படும்போது ஊதியம் கிடைக்காது, சொந்த ஊரில் உள்ள குடும்பத்துக்கு பணம் அனுப்ப இயலாமல் போகும்போது அங்கே அக்குடும்பம் சிக்கலை சந்திக்கும்.

கேரளாவின் வயனாடு மாவட்ட்த்தில் மிகப்பலர் வளைகுடா நாடுகளில் வேலைக்குப்போனவர்கள். விவசாயத்தில் நெருக்கடி, தற்கொலைகள் காரணாமாக இங்கே இருந்த பல்லாயிரம் விவசாயிகளும் தினக்கூலித்தொழிலாளிகளும் அருகில் உள்ள கர்னாடகாவுக்கு ஏதோ ஒரு வேலைக்காக இடம்பெயர்ந்தார்கள்.

நவதாராளக்கொள்கைகள் அமலாக்கப்பட்ட இந்த இருபது வருடங்களில் உச்சகட்ட  உலகமயமாக்கப்பட்ட மாநிலம் கேரளாதான். இது குறிப்பிடத்தக்க விசயமாகும்.  ஏனெனில் கேரளாவின் விளைபொருட்களில் பெரும்பாலானவை பணப்பயிர்களே, இவற்றின் விலையை தீர்மானிப்பவர்கள் சர்வதேச ஸ்டாக் மார்க்கெட் வியாபாரிகளும் பெருமுதலாளிகளும்தான். முக்கியமான விசயம் என்னவெனில் கேரளாவில் விளைகின்ற பொருட்களில் ஆகப்பெரும்பாலானவற்றை உள்ளூர் மக்கள் பயன்படுத்துவதில்லை, எல்லாம் ஏற்றுமதிதான்.  ஆக சர்வதேச அல்லது உள்நாட்டுப்பொருளாதாரத்தில் ஒரு  மோசமான சரிவு நேர்ந்தால் கேரளாவின் இத்தளம் மிக மோசமாகப்பாதிக்கப்படும், சுற்றுலா உள்ளிட்ட உள்ளூர் பொருளாதாரம் அனைத்தும் பாதிக்கப்படும்.

மஹாராஷ்ட்ராவில் ஒரே ஒரு குடும்பத்துக்கு ஒரு வீடு கட்டப்பட்டுள்ளது. அந்த வீடு 27 அடுக்குகள் கொண்டது. அமெரிக்க கட்டுமான நிறுவனமான பெர்க்கின்ஸ்&வில் என்பவர்களால் வாஸ்து முறைப்படி கட்டப்பட்டதாம். 4 லட்சம் சதுர அடி, 168 கார்கள் நிறுத்தக்கூடிய வசதி, 9 லிஃப்டுக்கள், மூன்று ஹெலிகாப்டர் தளங்கள்,நீச்சல்குளம்,பொழுதுபோக்கு தளங்கள், திரையரங்கம்...என நீளும் வசதிகள் கொண்ட சிறு வீடு. இந்த வீட்டின் சொந்தக்காரர் பெயர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் என்ற கம்பெனிக்கு சொந்தக்காரர். நமது பக்கத்து வீட்டில் ஒருவர் இறந்துவிட்டால் அந்த உடல் எடுத்துச்செல்லப்படும் வரை நமது வீட்டிலும்  ஒழுங்கான சமையல் இருக்காது, ஆனால் துக்கவீட்டுக்கு வருபவர்களுக்கு நம்மால் இயன்ற தேநீர்,குடிநீர், முடிந்தால் உணவும் கூட கொடுத்து உபசரிப்பது என்பது அந்த வீட்டின் துக்கத்தில் பங்கு பெறும் ஒரு அடையாளமாகும். ஆயிரக்கணக்கில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட, ஆசியாவின் மிகப்பெரும் மோசமான சேரிப்பகுதியான தாராவியும் இருக்கின்ற, உலகின் 5 வயதுக்கு உட்பட்ட எடைகுறைந்த குழந்தைகளில் 42 சதம் குழந்தைகளும் இருக்கின்ற இதே மாநிலத்தில்தான் தனது பகட்டையும் பணத்திமிரையும் வெளிச்சம்போட்டு காட்டும் மனிதாபிமானம் அற்ற ஒரு மிருகமும்  இருக்கின்றானாம். இவன் தான் உழைப்பால் உயர்ந்தவனாம், வளரும் இளம் தொழில்முனைவோருக்கு முன்மாதிரியாம்!

இது ஏதோ ஒரு தனிமனிதனின் குணாம்சம் அல்ல, இது உலகமயத்தின்  தாராளமயத்தின் பெருமுதலாளித்துவத்தின் விழுமியம், அதன் பகட்டுக்குப்பின்னால் ஒளிந்துள்ள ராட்சசமுகம் என்பதே உண்மை.




2 கருத்துகள்: